Sep 28, 2010

பெரும்போக நெற் செய்கைக்கென ரூ. 15,000 மில். உரம் இறக்குமதி

எதிர்வரும் பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான உர வகைகளை 15 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் ஏற்கனவே இறக்குமதி செய்துள்ளது.

இந்த உரத்தை விவசாயிகளுக்கு நேர காலத்துடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் தேவையான உர வகைகள் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது தடவை இதுவாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் த்ரும்போகத்தின் போது 7 இலட்சத்து 46 ஆயிரம் ஹெக்டயர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் யூரியா உரம் ஒரு இலட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் தொன்னும், பொட்டா சியம் உரம் 67 ஆயிரம் மெட்ரிக் தொன்னும், பொட்டேஸ் உரம் 60 ஆயிரம் மெட்ரிக் தொன்னும் பெரும்போக நெற் செய்கையின் போது தேவைப்படுவதாக விவ சாய அமைச்சின் செயலாளர் ஈ.கே.

கருணாதிலக்க கூறுகிறார். தேவையான உர வகைகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் முன்னரைப் போலன்றி இம் முறை விவ சாயிகளுக்குத் தேவையான உர வகைகள் அனைத்தையும் நேர காலத்துடன் கொடுக் குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment