
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சியில் இரண்டு பாடசாலைக ளில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடங்களுக்கான அடிக்கல் நேற்று நடப்பட்டது.
இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.
வட்டக்கச்சி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வி நடவடிக்கையை கருத்திற் கொண்டு வட மாகாண கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கற்கை நிலையங்கள் இரண்டு நேற்று திறந்து வைக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித் தார்.
தலா 5 மில்லியன் ரூபா செலவில் நான்கு நிரந்தர கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளுக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த இந்தக் குழுவினர் அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.
வட்டக்கச்சி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வி நடவடிக்கையை கருத்திற் கொண்டு வட மாகாண கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கற்கை நிலையங்கள் இரண்டு நேற்று திறந்து வைக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித் தார்.
தலா 5 மில்லியன் ரூபா செலவில் நான்கு நிரந்தர கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளுக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த இந்தக் குழுவினர் அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment