கொழும்பு மனிங் சந்தையில் பழங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள், அவற்றை பழுக்க வைக்கவும் பாதுகாத்து வைக்கவும் இரசாயன பதார்த்தங்களை சேர்த்து வருவதாக தெரிய வந்துள்ளதையடுத்து கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவதானமாக உள்ளனர்.
கடந்த வார இறுதியில் மனித பாவனைக்கு ஒவ்வாத 300 கிலோவுக்கு மேற்பட்ட பழ வகைகள் அழிக்கப்பட்டதாக பிரதான மருத்துவ அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
1980ம் ஆண்டின் உணவு சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் அதனை மீறும் உணவுச் சாலைகளின் சொந்தக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்த சட்டம் வழி வகுகிறது.
இவ்வாறு காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை, அயடின் சேர்க்கப்படாத உப்பை விற்றமை, பழுதான பழங்கள், தேயிலை ஆகியவற்றை விற்றமை மற்றும் பழங்களை உரியநேரத்துக்கு முன்னர் பழுக்க வைக்கும் வகையில் சில வகை இரசாயன பொருட்களை பயன்படுத்தியமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 18 வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்று டொக்டர் காரியவசம் மேலும் கூறினார்.
கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கடந்த வார இறுதியில் நடத்திய திடீர் சோதனைகளின் போது 114 விற்பனை நிலையங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் போது பெறப்பட்ட தேயிலை, மிளகாய்த் தூள், பழங்கள் காய்கறிகள், கருவாடு, இறால், நெத்தலி ஆகியவற்றின் 150க்கு மேற்பட்ட மாதிரிகள் தற்போது பரிசோதிக் கப்பட்டு வருவதாகவும் இதன் முடிவுகள் தெரியவரும் போது மேலும் சில வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்
கடந்த வார இறுதியில் மனித பாவனைக்கு ஒவ்வாத 300 கிலோவுக்கு மேற்பட்ட பழ வகைகள் அழிக்கப்பட்டதாக பிரதான மருத்துவ அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
1980ம் ஆண்டின் உணவு சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் அதனை மீறும் உணவுச் சாலைகளின் சொந்தக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்த சட்டம் வழி வகுகிறது.
இவ்வாறு காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை, அயடின் சேர்க்கப்படாத உப்பை விற்றமை, பழுதான பழங்கள், தேயிலை ஆகியவற்றை விற்றமை மற்றும் பழங்களை உரியநேரத்துக்கு முன்னர் பழுக்க வைக்கும் வகையில் சில வகை இரசாயன பொருட்களை பயன்படுத்தியமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 18 வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்று டொக்டர் காரியவசம் மேலும் கூறினார்.
கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கடந்த வார இறுதியில் நடத்திய திடீர் சோதனைகளின் போது 114 விற்பனை நிலையங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் போது பெறப்பட்ட தேயிலை, மிளகாய்த் தூள், பழங்கள் காய்கறிகள், கருவாடு, இறால், நெத்தலி ஆகியவற்றின் 150க்கு மேற்பட்ட மாதிரிகள் தற்போது பரிசோதிக் கப்பட்டு வருவதாகவும் இதன் முடிவுகள் தெரியவரும் போது மேலும் சில வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்
No comments:
Post a Comment