Sep 21, 2010

ஹெலிகாப்டர் விழுந்ததில் 9 பேர் பலி

காபூல்:ஆப்கனில் நேட்டோ படைகளின் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் ஒன்பது பேர் பலியாயினர். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஆப்கனில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. கடந்த 2001ல் ஆட்சியை இழந்த தலிபான்கள், காந்தகார் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி கொண்டு வெளிநாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆப்கனில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 529 வெளிநாட்டு வீரர்கள் தலிபான்களின் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே நேற்று, சாபுல் மாகாணத்தில் உள்ள டெய்சோபன் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த நேட்டோ படைகளின் ஹெலிகாப்டர் திடீரென நொறுங்கி விழுந்தது. இதில் ஒன்பது நேட்டோ வீரர்கள் பலியாயினர். ஒரு அமெரிக்கர், ஒரு ஆப்கன் நாட்டவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர். ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் விபத்துக்குள்ளானதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment