Sep 17, 2010

மட்டு. வெடிப்புச் சம்பவம்: வைத்தியசாலையில் கதறியழும் உறவுகள்

போதனா வைத்தியசாலையில் கூடியுள்ள காயமடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவதாகவும் காயமடைந்தோரைப் பார்வையிட பெருந்திரளான மக்கள் வைத்தியாசாலையில் கூடியுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இன்று முற்பகல் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றது. இச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மூவர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும் மற்றையவர் சீன நாட்டுப் பிரஜையெனவும் அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த 52 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment