இஸ்லாமாபாத், செப்.10: பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்படாது என்று பிரதமர் யூசுப் ரஸக்ஷ் கிலானி உறுதிபட தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு தனது பதவிக் காலம் முழுவதும் ஆட்சியில் இருக்கும். ராணுவத்தால், இந்த ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது; இப்போதைய சூழலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் ராணுவத்துக்கு இல்லை. ராணுவம் ஆட்சிக்கு வருவதற்குரிய சூழலும் இல்லை.
பல்வேறு தியாகங்களுக்குப் பிறகு 2008-ம் ஆண்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இப்போது நீதித்துறை தன்னிச்சையாக ஜனநாயக அடிப்படையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி செயல்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒரு பகுதிதான் ராணுவம், இதைக் கருத்தில் கொண்டே வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ராணுவத்தினர் முழுவீச்சில் ஈடுபடுகின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்பதான பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற தேவையற்ற பேச்சுகளைப் பேசி தங்களது நேரத்தை அவர்கள் வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்பதே எனது கருத்து. ராணுவம் வேறு, அரசு வேறு என்று நினைப்பவர்கள் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார்கள் என்றே அர்த்தம்.
பொதுமக்களில் சிலர் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால் ஜனநாயக செயல்பாட்டுக்கு நீதித்துறை உறுதுணையாக உள்ளது.
ஊடகங்கள், மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்துமே நாட்டுக்கு தற்போதைய தேவை ஜனநாயக ஆட்சி என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் உலக சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தேர்தல் மூலம் மக்களாட்சி நடைபெறுகிறது. இது முழு ஆட்சிக் காலமும் தனது பணியை நிறைவேற்றும் என்றார் கிலானி.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டதால் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் அரசு மெத்தனம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. இதனால் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் எம்க்யூஎம் என்ற அமைப்பின் தலைவர் அல்டாப் ஹுசைன் சமீபத்தில் ராணுவ தளபதிகளை சந்தித்து, ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் மிராசுதாரர்களுக்கு எதிராக கற்கால தண்டனை அளிக்கலாம் என பரிந்துரைத்திருந்தார். இதுவும் ராணுவ ஆட்சி ஏற்படக் கூடும் என்ற ஐயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது; இப்போதைய சூழலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் ராணுவத்துக்கு இல்லை. ராணுவம் ஆட்சிக்கு வருவதற்குரிய சூழலும் இல்லை.
பல்வேறு தியாகங்களுக்குப் பிறகு 2008-ம் ஆண்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இப்போது நீதித்துறை தன்னிச்சையாக ஜனநாயக அடிப்படையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி செயல்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒரு பகுதிதான் ராணுவம், இதைக் கருத்தில் கொண்டே வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ராணுவத்தினர் முழுவீச்சில் ஈடுபடுகின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்பதான பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற தேவையற்ற பேச்சுகளைப் பேசி தங்களது நேரத்தை அவர்கள் வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்பதே எனது கருத்து. ராணுவம் வேறு, அரசு வேறு என்று நினைப்பவர்கள் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார்கள் என்றே அர்த்தம்.
பொதுமக்களில் சிலர் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால் ஜனநாயக செயல்பாட்டுக்கு நீதித்துறை உறுதுணையாக உள்ளது.
ஊடகங்கள், மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்துமே நாட்டுக்கு தற்போதைய தேவை ஜனநாயக ஆட்சி என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் உலக சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தேர்தல் மூலம் மக்களாட்சி நடைபெறுகிறது. இது முழு ஆட்சிக் காலமும் தனது பணியை நிறைவேற்றும் என்றார் கிலானி.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டதால் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் அரசு மெத்தனம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. இதனால் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் எம்க்யூஎம் என்ற அமைப்பின் தலைவர் அல்டாப் ஹுசைன் சமீபத்தில் ராணுவ தளபதிகளை சந்தித்து, ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் மிராசுதாரர்களுக்கு எதிராக கற்கால தண்டனை அளிக்கலாம் என பரிந்துரைத்திருந்தார். இதுவும் ராணுவ ஆட்சி ஏற்படக் கூடும் என்ற ஐயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment