
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சமூகநல ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஸ்கெய்டில் ஒரு ஆய்வு மேற்கொண்டார். அதில் இறைவழிபாட்டில் நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் சிறந்த உடல்நலத்துடன் விளங்குகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இறைவழிபாட்டில் ஆழ்ந்த 423 பேரிடம் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 96 பேர் மதமாற்றம் ஆகினர். 54 பேர் இறைவழிபாட்டில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டனர். ஆனால் முழுமையான இறைவழிபாட்டில் ஈடுபட்டவர்கள் சமூகநலம், உடல்நலம் மற்றும் நன்னடத்தையில் சிறந்து விளங்கினர்.
இதன்மூலம் இறைவழிபாடு உடல்நலத்துடன் மனநலத்தையும் வளர்க்கும் என ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment