ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் தனியார் துறையினருக்கு வாடகைக்காக வழங்கப் பட்டிருந்த ஹசலக்க நெல் சந்தைப் படுத்தும் சபைக்குரிய களஞ்சியசாலையின் சுற்றுலா பங்களாவை அரசாங்கம் நேற்று மீண்டும் பொறுப்பெடுத்தது.
இதனையடுத்து குறித்த சுற்றுலா பங்களாவில் நேற்றைய தினம் அம்பாறை பிரதேசத்திலிருந்து 10 லொறிகளில் கொண்டு வரப்பட்ட 150,000 கிலோ நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பொது முகாமையாளர் வஜிர பெரேரா தெரிவித்தார்.
சந்தைப்படுத்தல் சபையின் பொது முகாமையாளர் மற்றும் ஹசலக்க பொலிஸார் ஆகியோர் இணைந்து இந்த பங்களாவை பொறுப்பேற்றனர்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் குறித்த பங்களா தனியார் துறையினருக்கு சொந்தமான முறையில் வழங்கப்பட்டது போல் இருந்து வந்துள்ளது.
கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து நெல் சந்தைப் படுத்தல் சபையின் தலைவர் கே.டீ. ஜயசிங்க ஆகியோர்களினது ஆலோசனை யின் பேரில் நேற்று இந்த பங்களா மீண்டும் அரச உடமையாக மாற்றப்ப ட்டிருப்பதாக பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment