பேருவளை நகரில் இடம்பெற்ற சம்பவத்திற்கு கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் களுத்துறை நாகொட ஆஸ்பத்திரி வைத்தியர் விடுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.
வாகனத்தில் பல இடங்களில் துப்பாக்கி சூட்டினால் சேதம் ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை தேடி பொலிஸ் குழுக்கள் வலை வீசியுள்ளன.
இதேவேளை துப்பாக்கிச் சமரின் போது மரணமான அளுத்கம, மொரகல்லைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனான சுதில் நிலுபுல் த சில்வாவின் இறுதிக் கிரிகைகள் நேற்று முன்தினம் (16) மாலை மொரகல்ல மயானத்தில் நடை பெற்றது.
பெருமளவிலான பாடசாலை மாண வர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சர்வ மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் இறுதிக் கிரிகைகளில் பங்குபற்றினர்.
பேருவளை, மொரகல்ல போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது.
பேருவளை நகருக்கு சமயப் பாடசாலை சீருடை தைக்க வந்த போது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் மரணமானார்.
No comments:
Post a Comment