Sep 15, 2010

சிறைகளிலுள்ள முதியோர், சிறுவரை விடுவிக்க நடவடிக்கை ஜனாதிபதி பணிப்புரை


சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவி க்கும் சிறுவர் மற்றும் முதியவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

சிறுவர் மற்றும் முதியோரை விடுதலை செய்யும் வகையில் சிபாரிசினை தமக்கு முன்வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சர் டியூ. குணசேகரவிற்கு உத்தரவிட்டார்.

நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய கைதிகள் நலன்புரி தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட அனுமதி மூலமாக ஐந்து சிறைக் கைதிகளை விடுதலை செய்தார்.

No comments:

Post a Comment