
அணுசக்தி கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு தனியார் டெலிவிஷனுக்கு பேட்டிஅளித்தார். அப்போது, அணு சக்தி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்க்க அது உதவும்.
ஈரானும் அதை விரும்பும் என கருதுகிறேன். உலக நாடுகளும் அதையேதான் விரும்புகின்றன என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா.சபை பொது கூட்டத்தில் ஈரான் அதிபர் மகமத் அகமதினேஜாத் பேசினார்.
அப்போது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய குடியரசுகளின் மீது மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொண்டால் அணுசக்தி குறித்த புதிய பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்றார். இந்த நிலையில் ஷிராஷ் நகருக்கு வந்த ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலிலரிஜான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு உலக வில்லன். அவர் எப்படி ஈரானுக்கு உதவி செய்ய முடியும். அமெரிக்கர்கள் உலகம் முழுவதும் பழி பாவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, ஒபாமாவின் உதவி எங்களுக்கு தேவையில்லை. அவரது வார்த்தையில் உண்மை இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஈரானும் அதை விரும்பும் என கருதுகிறேன். உலக நாடுகளும் அதையேதான் விரும்புகின்றன என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா.சபை பொது கூட்டத்தில் ஈரான் அதிபர் மகமத் அகமதினேஜாத் பேசினார்.
அப்போது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய குடியரசுகளின் மீது மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொண்டால் அணுசக்தி குறித்த புதிய பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்றார். இந்த நிலையில் ஷிராஷ் நகருக்கு வந்த ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலிலரிஜான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு உலக வில்லன். அவர் எப்படி ஈரானுக்கு உதவி செய்ய முடியும். அமெரிக்கர்கள் உலகம் முழுவதும் பழி பாவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, ஒபாமாவின் உதவி எங்களுக்கு தேவையில்லை. அவரது வார்த்தையில் உண்மை இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment