Sep 14, 2010

முல்லைத்தீவு மீனவருக்காக ஐஸ் தொழிற்சாலை, வெளிச்ச வீடு நிர்மாணம்






முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் நலன் கருதி ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் வெளிச்ச வீடு ஆகியவற்றை நிர்மாணிக்கவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடிக் குடும்பங்களுக்குத் தேவையான மீன் பிடிப் படகுகளை அமைச்சுக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த மீனவர்களின் நலனை கருத்திற்கொண்டு ரெஜிபோம் பெட்டிகள் பொருத்தப்பட்ட 65 சைக்கிள் களும் 50 தோணிகளும் கையளிக்கப் பட்டுள்ளன. நாளாந்தம் பிடிக்கும் மீன்களை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டே வேல்ட் விஷனின் ஒத்துழைப் புடன் ஐஸ் உற்பத்தி நிலையம் ஒன்றை முல்லைத்தீவில் அமைத்துக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள தென்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 13 மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது குறைகளை ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.

No comments:

Post a Comment