யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் செயலகத்தில் இடம்பெற்றது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் வடமாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதில் கலந்து கொண்டார். யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.
இந்தக் கூட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, வட மாகாண பொது நிர்வாக செயலாளர் தி. இராசநாயகம், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ. சரவணபவன், இ. சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பிரதேச சபை செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் பசில் மேலும் கூறியதாவது:
தீவகம் பண்ணை - வேலணை வீதியும் கட்டுவன், தொண்டைமானாறு பிரதான வீதிகள் விரைவில் மீள்புனரமைப்பு செய்யப்படும். அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
வலிகாமத்தில் 1990 களில் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு (வலி. வடக்கு) மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்து அபிவிருத்திகள் செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன்.
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்படுவதற்கான பாரிய திட்டமிடலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
துறைசார்ந்த திணைக்களங்களுக்கு ஏற்கனவே இனம் காணப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கு முழு மையாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகளை திணைக்களங்களின் தலைவர்கள் முன்வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment