Sep 16, 2010

விஸா காலாவதி: பிரான்ஸ் தம்பதி காலியில் கைது


விசா காலாவதியான நிலையில் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி, கோட்டை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காலி கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

காலி மஜிஸ்ட்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை இம்மாதம் 23ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா வைத்திருக்கவில்லை. கடந்த 4ம் திகதியுடன் இவர்களது விசா காலாவதியாகியுள்ள நிலையில் இவர்கள் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான காரணங்களைக் கூற தவறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் ஆண் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். (42 வயது), பெண் மடகஸ்கரைச் சேர்ந்தவர் (23 வயது).

இருவரும் மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment