Sep 26, 2010

வெடி விபத்துக்கள் நடக்கும்:இலங்கைக்கு பெரும் அபாயம்

இலங்கை போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள பெரும்பாலான வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, கரடியனாறில் நடந்தது போல, எதிர்காலத்தில் மேலும் பல வெடி விபத்துகள் நடக்கலாம்' என, தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையில் சமீபத்தில் கரடியனாறு என்ற இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிர்பாராதவிதமாக வெடித்தன. இதில் 27 போலீசார் உயிரிழந்தனர். சாலை கட்டுமான பணிகளுக்காக சீன நிறுவனம் ஒன்றால், போலீஸ் ஸ்டேஷனில் இந்த வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாக பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி:இலங்கையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீத போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் தான் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு லட்சம் கிலோ வெடிபொருட்கள், எந்தவித பாதுகாப்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளன. எனவே, கரடியனாறில் நடந்தது போன்ற, மேலும் பல வெடிவிபத்துகள் எதிர்காலத்தில் நிகழும் அபாயம் நிலவுகிறது. இதை தவிர்ப்பதற்காக, போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வெடிபொருட்களை, சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றுவது குறித்து, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment