Sep 15, 2010

சணச அபிவிருத்தி வங்கி கிளிநொச்சியில் திறப்பு

சணச அபிவிருத்தி வங்கியின் புதிய கிளையொன்று நேற்று 14ம் திகதி கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வங்கியின் கிளையை இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ நேற்றுக் காலை 8.30 மணிக்குத் திறந்து வைத்தார்.

கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதி, குறிப்பாக விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கடன் வசதி என்பன இக்கிளை ஊடாகச் செய்து கொடுக்க எதிர்பார்ப்பதாக வங்கியின் தலைவர் கலாநிதி பி. ஏ. கிரிவந்தெனிய கூறினார்.

No comments:

Post a Comment