மாலைதீவு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரும் விடுதலை செய்யப் பட்டுள்ளதோடு அவர்கள் விமானம் மூலம் இன்று இலங்கை வந்தடைய உள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு கூறியது. பேருவளையில் இருந்து இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 பேர் மாலைதீவு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் அறுவர் கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இருவருக்கும் 6 மாத சிறையும் 8 இலட்சம் ரூபா வீதம் தண்டமும் விதிக்கப்பட்டது. தண்டப் பணம் செலுத்தாததால் ஒன்றரை வருட மேலதிக சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
இவர்களில் அறுவர் கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இருவருக்கும் 6 மாத சிறையும் 8 இலட்சம் ரூபா வீதம் தண்டமும் விதிக்கப்பட்டது. தண்டப் பணம் செலுத்தாததால் ஒன்றரை வருட மேலதிக சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
No comments:
Post a Comment