Sep 21, 2010

கணக்கு தாருங்கள்: பாக்., எம்.பி.,க்கள் கேள்வி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் உளவு அமைப்பின் வரவு, செலவு கணக்குகளை தெரிவிக்க வேண்டும் என, அந்நாட்டு எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ( நவாஸ் பிரிவு) எம்.பி., சவுத்ரி நிசார் அலிகான் தலைமையில் பொதுகணக்கு குழு நேற்று முன்தினம் கூடி விவாதித்தது. பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ராணுவ ஆட்சி காலத்தில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது துணை மானிய கோரிக்கையின் பேரில் 40 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சி எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

"பாகிஸ்தான் உளவு அமைப்பு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அரசின் கீழ் இயங்குகிறதா என்பது தெரியவில்லை. இந்த அமைப்பு அரசியல்வாதிகளின் பேச்சுக்களை ஒட்டுக் கேட்கிறது. பத்திரிகையாளர்களை கைது செய்து துன்புறுத்துகிறது. ராணுவத்துக்கு உளவு அமைப்பின் சேவை தேவை. ஆனால், அரசியலில் இந்த அமைப்பின் தலையீடு அதிகமாக உள்ளது. இந்த அமைப்பின் வரவு, செலவு கணக்குகளை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்' என, பொதுகணக்கு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.,க்கள் வற்புறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment