Sep 10, 2010

கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி

கிழக்கு மாகாண சபை, அங்கு தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறியை ஆரம்பித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 30 இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறி வழங்குவதற்கான அனுமதி அட்டையை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் வழங்கினார்.

பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன கிராமிய மின்சார அமைச்சர் எம். எஸ் உதுமாலெவ்வே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், கோரளைப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் தா. உதயஜீவதாஸ் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன், அனுசரணையாளர்களான சேவாலங்கா அமைப்பின் பிரதிநிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தேவராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment