வடமராட்சி கிழக்கில் மீள்குடியேறிவரும் மக்களின் நலன் கருதி அரசின் பல்வேறு நல சேவைத் திட்டங்கள் நேற்று முன்தினம் (செவ்வாய்) பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அரச நிர்வாகத் தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறு நலச் சேவைகள் இதில் அடங்குகின்றன. ஆழியவளை – பருத்தித்துறை, ஆழியவளை - கொடிகாமம் ஆகிய பாதைகளுக்கான பஸ் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் செம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, வடமராட்சி கிழக்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வத்திராயன் கிளை, மருதங்கேணி அரசினர் கிராமிய வைத்தியசாலை ஆகிய சேவைகள் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அத்துடன் யுத்தத்தினால் சேதமடைந்த பருத்தித்துறை பிரதேச சபையின் செம்பியன்பற்று அலுவலகம் புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைப்பதற்கு அத்திவாரக் கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.
இதுதவிர படையினால் ஆழியவளையி லும் உடுத்துறையிலும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இரு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அரச நிர்வாகத் தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறு நலச் சேவைகள் இதில் அடங்குகின்றன. ஆழியவளை – பருத்தித்துறை, ஆழியவளை - கொடிகாமம் ஆகிய பாதைகளுக்கான பஸ் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் செம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, வடமராட்சி கிழக்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வத்திராயன் கிளை, மருதங்கேணி அரசினர் கிராமிய வைத்தியசாலை ஆகிய சேவைகள் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அத்துடன் யுத்தத்தினால் சேதமடைந்த பருத்தித்துறை பிரதேச சபையின் செம்பியன்பற்று அலுவலகம் புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைப்பதற்கு அத்திவாரக் கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.
இதுதவிர படையினால் ஆழியவளையி லும் உடுத்துறையிலும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இரு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment