வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தை நகரசபைத் தலைவர் நேற்று செவ்வாய்க்கிழமை இடை நிறுத்தி வைத்ததையடுத்து சபை உறுப்பினர்கள் 10 பேரும் மேற்படி சனநாயக விரோதச் செயலை கண்டிப்பதாகத் தெரிவித்து அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கொளுத்தும் வெய்யிலில் சுமார் இரண்டு மணி நேரம் வாய்களை கறுப்புத் துணியினால் கட்டியவாறு உறுப்பினர்கள் அமைதியான முறையில் மைதானத்தின் நடுவில் அமர்ந்திருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தலைவர் முகுந்தரதன் உள்ளிட்ட உறுப் பினர்களான எஸ். சுரேந்திரன், எஸ். சிவகுமார், இ. கனகையா, புளொட் உறுப்பினர்களான எதிர்க்கட்சி தலைவர் ரி. லிங்கநாதன், சு. குமாரசாமி, பார்த்திபன், பொதுசன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் லலித் ஜயசேகர, அப்துல்பாரி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எல். முனாபர் ஆகிய பத்து சபை உறுப்பினர்களும் தலைவரின் நடவடிக்கையினை ஆட்சேபித்து கட்சி பேதமற்ற முறையில் தாங்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியதாக குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment