
வன்னியில் இறுதிக்கட்ட போரின் போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்த புலிகளின் முன்னாள் சிரேஷ்ட தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டதாக பொய்யான தகவல்களை சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கியதாக சரத் பொன்சேகாவுக்கு எதிரான தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகியது. மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகளின் குழு முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது. இன குரோதத்தை தோற்றுவிக்கும் வகையிலும் அரசிற்கு எதிராக காழ்ப்புணர்ச்சியை ஏற்படத்தும் வகையிலும் பொய்யான தகவல்களை வழங்கினார் என குற்றம் சுமத்தியே சட்டமா அதிபர் இந்த மனுவை சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளார். மனுதாரர்கள் சார்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் பிரட்ரிகா ஜேன்ஸ் உட்பட்டோர் மன்றில் ஆஜராகியிருந்தனர். இந்தநிலையில் இன்று சுகவீனம் காரணமாக பிரதிவாதியான சரத் பொன்சேகா மன்றில் ஆஜராவில்லை என அவரின் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment