டிக்கோயா, கிலென்கெய்ன் ஆதார வைத்தியசாலையில் 150 கட்டில்களைக் கொண்ட புதிய வார்ட்டுத் தொகுதியொ ன்றை எழு நூறு மில்லியன் (700) ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இவ்வார்ட்டுத் தொகுதியின் நிர்மாண வேலைகள் இவ்வருட முடிவுக்குள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்து வரும் மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என்று கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகர் விக்ரம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உதவி உயர் ஸ்தானிகரான மிஸ்ரா கடந்த சனியன்று டிக்கோயா கிலென்கெய்ன் ஆதார வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்தார்.
அங்கு ஆஸ்பத்திரியின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் நிஹால் விக்கிரம சூரியவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் ஆஸ்பத்திரியையும் சுற்றிப்பார்த்தார்.
இவ்வாஸ்பத்திரியில் கடமையாற்றும் டாக்டர்களினதும், இதர ஊழியர்களினதும் பணிகளை அவர் பெரிதும் பாராட்டினார். இச்சமயமே அவர் இவ்வாஸ்பத்திரியை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் 700 மில்லி யன் ரூபா செலவில் 150 கட்டில்களைக் கொண்ட புதிய வார்ட்டுத் தொகுதி அமைக் கப்படும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment