Oct 16, 2010

அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் 2 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்க கருணாநிதி உத்தரவு





ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் 40 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.

தற்போது விவசாய இணைப்பு கோரி சுமார் 4 லட்சத்து 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் வீதம் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் இணைப்பு வழங்க குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும்.

விவசாயிகளின் நலன் கருதி, 10 வருடங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் விவசாய மின் இணைப்புகள் வழங்க முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இத்தகவல் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment