Oct 29, 2010

இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 343 ஆக உயர்வு


ஜகார்த்தா, அக். 28: இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை வியாழக்கிழமை 343 ஆக உயர்ந்தது.

மெந்தாவி தீவில் திங்கள்கிழமை கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் எழுந்து பலர் உயிரிழந்தனர். சாவு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இன்னும் 338 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியை அடுத்து பல கோடி மதிப்புள்ள எச்சரிக்கை கருவிகள் சுமத்ரா தீவுப் பகுதிகளில் நிறுவப்பட்டன. ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்காததால் கருவிகள் செயலிழந்து விட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment