Oct 13, 2010

கல்பிட்டியில் டெங்கு நோயாளர் இனங்காணப்படவில்லை : பிரதேச செயலாளர்

கல்பிட்டி பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் இன்று வரை டெங்கு நோயாளர் எவரும் இனம் காணப்படவில்லையென்று கல்பிட்டி பிரதேச செயலாளர் றியால்தீன் தெரிவித்தார்.

கல்பிட்டி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர். பளல்ல தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மேலும் அவர் கருத்துரைக்கையில்,

"கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கிராம அதிகாரி பிரிவுகளிலும், தற்போது டெங்கு குறித்த அறிவுறுத்தல்களும் சிரமதானப் பணிகளும் இடம்பெறுகின்றன. சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் டெங்கு குறித்த அறிவூட்டல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் மாதத்தில் டெங்கு நோயாளர்கள் என சிலர் இனங்காணப்பட்டபோதும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களிலும் டெங்கு ஒழிப்பு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment