Oct 16, 2010

திருவாரூர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது என்ஜின் மோதல்

திருவாரூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 8 மணிக்கு திருத்துறைப்பூண்டி செல்லும் பாசஞ்சர் ரெயில் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது.

அதே ரெயில் பாதையில், பின்புறம் தனி என்ஜின் ஒன்று குட்ஷெட்டிற்குச் செல்ல நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில், திருத்துறைப்பூண்டி ரெயில் புறப்பட்டதாக நினைத்து, பின்னால் நின்று கொண்டிருந்த என்ஜினை டிரைவர் இயக்கினார்.

இந்த என்ஜின், திருத்துறைப்பூண்டி ரெயிலின் கடைசிப் பெட்டி மீது மோதியது. இதில் கடைசிப் பெட்டி சேதம் அடைந்தது. அதில் இருந்த சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த பெட்டியைக் கழற்றிவிட்டு மாற்று பெட்டி மாட்டப்பட்டு திருத்துறைப்பூண்டி ரெயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

No comments:

Post a Comment