நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கை பெறுவதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
÷நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழ்நிலையில் தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று புதன்கிழமை அறிவித்தது.
÷எனவே தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி இதைக் கூறினார்.
÷தி.மு.க.வின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவருடைய தலைமையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடந்தது.
÷அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
÷பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையில் பதில் சொல்ல விரும்பவில்லை. அப்படிக் கூறி, இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட நான் இடம் தர விரும்பவில்லை.
÷சட்டப்படி நமக்கு வந்து சேர வேண்டிய நீருக்காக தொடர்ந்து நாம் வாதாடுவோம்; நடவடிக்கை எடுப்போம்.
÷கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததாகவும், தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று அதில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் செய்திகளை இன்னும் பார்க்கவில்லை. அவற்றைப் பார்த்த பிறகுதான் அதுபற்றி கருத்து கூற முடியும்.
÷காவிரியில் தண்ணீர் திறப்பது பற்றி ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக கூறியிருக்கிறோம். எனவே கடிதம் எழுத வேண்டியதில்லை. அவருக்கு இதுபற்றித் தெரியும்.
÷இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அது குறித்து சட்டப்படி நாங்கள் அணுகுவோம் என்று முதல்வர் கூறினார்.
÷காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டது என கர்நாடகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
÷வியாழக்கிழமை கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 124.70 அடியாக இருந்தது. அணைக்கு வியாழக்கிழமை நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி அணைக்கு விநாடிக்கு 25,043 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து விநாடிக்கு 25,099 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. புதன்கிழமையைவிட வியாழக்கிழமை அணையில் இருந்து கூடுதலாக 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். காவிரி பாசனப் பகுதியில் உள்ள மற்றோர் அணையான கபினியில் நீர்வரத்து குறைவாக இருந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
÷நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழ்நிலையில் தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று புதன்கிழமை அறிவித்தது.
÷எனவே தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி இதைக் கூறினார்.
÷தி.மு.க.வின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவருடைய தலைமையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடந்தது.
÷அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
÷பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையில் பதில் சொல்ல விரும்பவில்லை. அப்படிக் கூறி, இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட நான் இடம் தர விரும்பவில்லை.
÷சட்டப்படி நமக்கு வந்து சேர வேண்டிய நீருக்காக தொடர்ந்து நாம் வாதாடுவோம்; நடவடிக்கை எடுப்போம்.
÷கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததாகவும், தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று அதில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் செய்திகளை இன்னும் பார்க்கவில்லை. அவற்றைப் பார்த்த பிறகுதான் அதுபற்றி கருத்து கூற முடியும்.
÷காவிரியில் தண்ணீர் திறப்பது பற்றி ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக கூறியிருக்கிறோம். எனவே கடிதம் எழுத வேண்டியதில்லை. அவருக்கு இதுபற்றித் தெரியும்.
÷இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அது குறித்து சட்டப்படி நாங்கள் அணுகுவோம் என்று முதல்வர் கூறினார்.
÷காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டது என கர்நாடகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
÷வியாழக்கிழமை கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 124.70 அடியாக இருந்தது. அணைக்கு வியாழக்கிழமை நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி அணைக்கு விநாடிக்கு 25,043 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து விநாடிக்கு 25,099 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. புதன்கிழமையைவிட வியாழக்கிழமை அணையில் இருந்து கூடுதலாக 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். காவிரி பாசனப் பகுதியில் உள்ள மற்றோர் அணையான கபினியில் நீர்வரத்து குறைவாக இருந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
No comments:
Post a Comment