ஹனோய், அக். 28: ஆசியான்- இந்தியா, மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை வியத்நாம் தலைநகர் ஹனோய் சென்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான், மலேசியா மற்றும் வியத்நாம் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒரு வார கால பயணத்தின் கடைசி கட்டமாக வியத்நாமுக்கு அவர் வியாழக்கிழமை சென்றார்.
அங்கு நடைபெறும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாடு ஆகியவற்றில் அவர் கலந்து கொள்கிறார். விமான நிலையத்தில் அவரை வியத்நாம் சட்ட அமைச்சர் ஹா ஹங் குவாங் வரவேற்றார்.
வர்த்தகம், எரி சக்தி துறையில் ஒத்துழைப்பு, பேரிடர் மேலாண்மை, தட்ப வெட் நிலை மாறுபாடு மற்றும் வெப்பமயமாதல் உள்ளிட்ட பல அம்சங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
வியத்நாம் பயணத்தின் போது சீனப் பிரதமர் வென் ஜியா பாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது காஷ்மீர் மக்களுக்கு சீனா தனி விசா வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சீனப் பிரதமருடன் மன்மோகன் சிங் பேசுவார் எனத் தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான், மலேசியா மற்றும் வியத்நாம் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒரு வார கால பயணத்தின் கடைசி கட்டமாக வியத்நாமுக்கு அவர் வியாழக்கிழமை சென்றார்.
அங்கு நடைபெறும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாடு ஆகியவற்றில் அவர் கலந்து கொள்கிறார். விமான நிலையத்தில் அவரை வியத்நாம் சட்ட அமைச்சர் ஹா ஹங் குவாங் வரவேற்றார்.
வர்த்தகம், எரி சக்தி துறையில் ஒத்துழைப்பு, பேரிடர் மேலாண்மை, தட்ப வெட் நிலை மாறுபாடு மற்றும் வெப்பமயமாதல் உள்ளிட்ட பல அம்சங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
வியத்நாம் பயணத்தின் போது சீனப் பிரதமர் வென் ஜியா பாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது காஷ்மீர் மக்களுக்கு சீனா தனி விசா வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சீனப் பிரதமருடன் மன்மோகன் சிங் பேசுவார் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment