
எண்ணங்கள்
கந்தையென்றாலும் அதைக் கசக்கிக் கட்ட வேண்டும் என்பது பழமோண். எங்கள் உடல் அழகை எவ்வாறு நாம் சுத்தமாக வைத்திருக்கின்றோமோ! அந்தளவுக்கு எமது உளமும் தூய்மையாக இருக்க வேண்டும்.
நம்மில் பலர் அப்பிடி இல்லை. பக்கத்து வீட்டுப் பொண்ணு என்ன செய்கிறாள் என்றுதான் பார்ப்பார்கள். அவள் செய்ததை விட ஒரு படி கூட தான் செய்ய வேண்டும் என்று அங்கலாய்ப்பாள். இந்த மாதிரியான தன் அங்கலாய்ப்பைத் தீர்ப்பதற்கு கணவனைப் படாத பாடுபடுத்துவாள். கணவனும் அவள் சொல் கேட்டு கடனை உடனைப் பட்டு அவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து வைப்பான். நாள் செல்லைச் செல்ல அது ஒரு புற்று நோய் போல அவர்களின் மனங்களை உலுப்பிச் செல்லும் போது பழைய இடத்துக்கு வந்து இருந்து கொண்டு முறைப்படி முன்னேறியவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டுத் தண்ணி மட்டும் குடித்துக் கொண்டிருப்பார்கள்.
பக்கத்து வீட்டுக்காரன் நல்ல வடிவான மோட்டார் சைக்கிள் எடுத்துப் போட்டான் என்பதற்காக எமது தகுதி நிலையினையும் தாண்டி அதை ஒத்ததாகவோ அல்லது அதைவிட பெறுமதியான மோட்டார் சைக்கிளையோ எடுத்து விடுவதென்பது மனிதன் தான் உருக்குலைவதற்கு ஆயத்தமாகின்றான் என்றே அதன் பொருளாகும்.
பக்கத்து வீட்டுக்காரன் தன் மகனை ஒரு வைத்தியராகவோ, அல்லது பொறியியலாளராகவோ உருவாக்கப் பாடுபடுகின்றான் என்றால் அதை நாமும் பின்பற்றுவதென்பது ஊருக்கும் நல்லது என்பதோடு அதுநாட்டுக்கும் ஆரோக்கியமானதாகும்.
நாளுக்கு நாள் மாறும் நாகரிகங்களால் நம்மவர்களின் உடைக் கலாசாரம் நாறிப் புழுத்துப் போவதை யாவரும் காணக் கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. அதில் ஆண்களின் ஆடைக் கலாசாரம் என்பது ஓரளவு பக்குவ நிலையில் இருக்க பெண்களின் நவ நாகரிக உடைக் கலாசாரங்களால் கந்தபுராணக் கலாசாரம் கந்தறுந்து போகுது என்றுதான் சமூக அக்கறைகொண்டோர் பலரும் ஆதங்கம் கொள்கின்றனர்.
உடலை ஒட்டி உடலை வாளிப்பாகக் காட்டி நிற்கும் உடைகளே இன்று பெரும்பாலான பெண்கள் அணிந்து மகிழ்கின்றனர். அப்படியான உடைகள் அணியாதவர்கள் அநாகரிகமானவர்களாம்.
பெண்களுக்கான உடைகள் எது வந்த போதும் பஞ்சாப் மாநிலப் பெண்களால் பயன்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் மனங்களில் ஊஞ்சலாடி இன்று எம்மவரையும் கவர்ந்துவிட்ட பஞ்சாபி ஆடை என்பது நாகரிகமானதும், வணக்கத்துக்குரிய ஓர் அம்சமாகவும் விளங்கி வருகின்றது.
பாடசாலை விழாக்கள், கோயில் திருவிழாக்கள், அலுவலகக் கடமை நேரங்கள் மற்றும் வேறு விழாக்களின் போது பஞ்சாபி உடையினைப் பெண்கள் அணிந்து வருகின்ற போது விரச நிலைகள் மறைக்கப்பட்டு தமிழ் கலாசார பண்பு நிலைகள் மேலோங்குவதற்கும் வழி சமைத்து விடுகின்றன.
இன்று பெண்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக மோட்டார் சைக்கிள் விளங்குகின்றது. மோட்டார் சைக்கிளை சிரமமின்றி ஓட்டுவதற்கும் இதன் சேவை அளப்பரியதாகும்.
திருமணமாகி மூன்று அல்லது நான்கு பிள்ளைக்குத் தாயான பெண்கள் இளைய ஆண் சமூகத்திற்கு முன் தங்களை மாபெரும் கவர்ச்சி பொம்மைகளாகக் காட்டிவிடும் உள் நோக்கில் உடல் இறுக்கு சட்டைகள் அணிந்து கொண்டு தங்களை நாகரிகத்தின் உச்சவாதிகள் என்று காட்டி வலம் வருகின்றனர். இதற்காக நவீன கணவன்மார்களும் உடந்தை கொள்வதுதான் வேடிக்கையானதும், வேதனையானதுமான விடயமாகும்.
வை வைபவங்களின் போது திருமணமான பெண்கள் சாறியும், இளம் பெண்கள் பஞ்சாபியும், சிஹஙுஜீ ஷிஹஙுலீலீ உம் அணிந்து கொள்வது என்பது ஆலய தெய்வீகத்தன்மைக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் உரிய பாதுகாப்பானதாகும் என்பதே எனது ஆதங்கமுமாகும்.
அன்று ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் கல்யாண வீட்டு வைபவம் ஒன்றுக்காக வேட்டிகட்டி தூய்மையான உடை உடுத்து வந்து நின்றார். அவருக்கு 32 வயதுதான் இருக்கும். அந்த உடையில் அவரைப் பார்க்கும் போது சுத்தமான சைவப்பழமாக அவர் இருந்தார். நான் ஜீன்ஸ்பான்ட் அணிந்திருந்தேன். அவரைப் பார்த்ததும் எனக்கு ஏதோ போல் இருந்தது. உடனடியாக வீடு போய் வேட்டி அணிந்து வந்து நின்றேன்.
நான் அப்படி வந்து நின்ற போதுதான் அறிந்துகொண்டேன் முதல் வேட்டி கட்டி வந்தவரை அவர் மனைவி அவசர அவசரமாகப் பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று ‘என்ன இது எப்பவும் நாகரிகமில்லாமல்...! மற்றவர்களைப் பாருங்க என்ன டீசென்ராக வந்து நிக்குறாங்கள். கருமம் கருமம்’ என்று திட்டிக்கொண்டாளாம்.
அப்பாவிக் கணவன் அவள் சொல் கேட்டு ஜீன்ஸ் பான்ட் அணிந்து வருவதற்காக வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டாராம். இப்ப நான் மட்டுமே அங்கு சுத்த சைவப்பழமாக நின்றுகொண்டிருந்தேன்.
No comments:
Post a Comment