Oct 16, 2010

தலிபான்களால் அறுக்கப்பட்ட ஆப்கன் பெண்ணின் மூக்கு ஆபரேசன் மூலம் சீரமைப்பு


ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் அலிஷா (19). ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவரை 12-வது வயதில் தலிபான் தீவிரவாதிக்கு திருமணம் செய்து வைத்தனர். இதை தொடர்ந்து கணவரது குடும்பத்தில் அவரை மிகவும் கொடுமைப்படுத்தினர்.

மாட்டு கொட்டகையில் அவரை தங்க வைத்தனர். இரவில் ஆடு, மாடுகளுடன் அவரையும் அங்கேயே தூங்க வைத்தனர். மேலும் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இது போன்ற தாங்க முடியாத பல கொடுமைகளை செய்தனர்.

இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இருந்தும் கணவர் அவரை விடவில்லை. அவரை, தேடி கண்டு பிடித்து இழுத்து வந்தனர். அலிஷாவின் மூக்கு மற்றும் காது போன்ற உறுப்புகளை அறுத்து முக அழகை கோரமாக்கினர்.

இதை தொடர்ந்து வாழ்க் கையில் வெறுப்புற்ற அவர் மலையில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த உறவினர்கள் மீட்டு அவரது தாத்தா வீட்டில் தங்க வைத்தனர். இதற்கிடையே மூக்கு மற்றும் காது அறுக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது போட்டோ “டைம்” பத்திரிகையில் அட்டைப்படமாக வெளியானது. இது உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையே அவரது மூக்கு மற்றும் காதை சீரமைத்து உதவ அமெரிக்காவின் கிராஸ்மேன் பர்ன் அறக்கட்டளை முன் வந்தது. அவர்கள் அலிஷாவை அமெரிக்காவுக்கு அழைத்து சென்றனர்.

பின்னர், கலிபோர்னியாவில் உள்ள “வெஸ்ட் கில்வ்” ஆஸ்பத்திரியில் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேசன் மூலம் மூக்கு மற்றும் காது சீரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அலிஷா தான் இழந்த அழகிய முகத்தை மீண்டும் பெற்றார்.

எலும்பு, தசை மற்றும் சவ்வுகளால் அவரது காது மற்றும் மூக்கு சரி செய்யப்பட்டது. இழந்த உறுப்புகளை கண்ணாடி மூலம் மீண்டும் பார்த்த அலிஷா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதற்காக தனக்கு உதவி செய்த அறக்கட்டளை நிறுவனத்தின ருக்கு நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையே, மீண்டும் புதுவாழ்வு பெற்ற அலி ஷாவை உற்சாகப்படுத்தும் வகையில் அவருக்கு கலி போர்னியாவின் கவர்னரும், நடிகருமான அர்னால்டின் மனைவி மரியா ஷரைவர் விருது வழங்கினார்.

No comments:

Post a Comment