Oct 14, 2010

புதுடில்லியில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு புது டில்லி விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்திய உயர் அதிகாரிகள் ஜனாதிபதியையும் அவரது குழுவினரையும் வரவேற்றனர்.

இந்திய மத்திய அரசின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி புது டில்லி சென்றுள்ளார். இன்று மாலை அங்கு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வில் விஷேட அதிதியாக ஜனாதிபதி கலந்துகொள்கிறார்.

No comments:

Post a Comment