Nov 24, 2010

பொன்சோகவிற்கு சிறையில் உடற்பயிற்சி கருவிகள்






இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறையில் உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்க நடந்த சண்டையை தலைமை ஏற்று நடத்தியவர், முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இவர் அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிட்டார். இதை தொடர்ந்து இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ராணுவ கோர்ட் இவருக்கு 30 மாத சிறை தண்டனை அளித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலை படை தாக்குதலில் பொன்சேகா பலத்த காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட உடல் பாதிப்புகள் காரணமாக, தற்போதும் அவர் மருந்துகள் உட்கொண்டு வருகிறார். உடல் நலத்தை பேணுவதற்கு வசதியாக உடற்பயிற்சி கருவிகளை அவருக்கு வழங்கும் படி கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தற்போது உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் தண்ணீர் கசிவதால் கூரையை பழுது பார்க்கும் பணி நடக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

அதிக வெப்பமாகும் ஏரிகள் : "நாசா' ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளாக ஏரிகள் சூடாகி வருவதாக "நாசா' ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் "நாசா' மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்நீடர், சைமன் ஹூக் ஆகியோர் செயற்கைக் கோள் அளித்த விவரங்களை வைத்து, உலகம் முழுவதும் உள்ள 167 பெரிய ஏரிகளை ஆய்வு செய்தனர். கடந்த 85ம் ஆண்டு முதல் ஏரிகளின் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்த போது, சில ஏரிகள் 1.8 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஏரிகள் அதிகம் வெப்பமடைந்து காணப்படுகின்றன. சைபீரியா, மங்கோலியா, வடக்கு சீனா பகுதிகளில் மிதமான வெப்பம் அதிகரித்துள்ளது. பூமி கோளத்துக்கு தெற்குப் பகுதியில் உள்ள ஏரிகளில் அவ்வளவாக வெப்பம் உயரவில்லை. வடக்கு ஐரோப்பாவில் ஏரிகளை சுற்றியுள்ள காற்று பகுதியை விட, தண்ணீர் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஏரிகளின் வெப்பம் அதிகரிப்பதால் பாசி அதிகம் படிந்து, மீன் இனம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு : கருணாநிதி கிருஷ்ணாவிடம் வலியுறுத்து

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அரசியல் தீர்வொன்றுக்கு வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருடி;ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை தரவுள்ளார்.

"மீளக்குடியமர்த்தப்படாமல் 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும்" என மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்து கொடுக்கும்படி இந்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வத்தளையில் தமிழ் வர்த்தகர் ஒருவரை காணவில்லை

வத்தளையில் பகுதியில் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தலைமயிர் வெட்டுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

வத்தளை அல்விஸ் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய கணபதி குணரத்தன என்பவரே காணமல் போயுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

Nov 22, 2010

தமிழர் பகுதிகளில் சேவையைக் குறையுங்கள்: செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு கட்டளை


கொழும்பு,நவ.21: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இப்போது செய்துவரும் சேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இதை சங்கத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் சரஸி விஜரத்ன கொழும்பில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சேவையை ஏன் குறைக்க வேண்டும், சேவை இனி தேவைப்படவில்லையா, அந்தச் சேவைகளை இலங்கை அரசே செய்ய மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டதா என்ற விளக்கம் ஏதும் இல்லாமல், சேவை செய்தது போதும் என்று மட்டும் அரசு அழுத்தம்திருத்தமாகச்

சொல்லியிருக்கிறது.

தமிழ் ஈழ விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான சண்டை கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்தது. அப்போதெல்லாம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஒரே ஆறுதலாக, உற்ற துணையாக களத்தில் நின்றது இந்த செஞ்சிலுவைச் சங்கம்தான்.

வாழைச் சேனையில் சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த இல்லத்தை, விடுதலைப் புலிகளின் பாசறை என்று கூறி வான்வழித் தாக்குதலை இலங்கை விமானப்படை நடத்தியபோது உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றவும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யவும் ஓடோடி வந்தது இந்த செஞ்சிலுவைச் சங்கம்தான். அந்த ஒரு சம்பவம் என்று மட்டும் இல்லை, தமிழர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சம்பவத்திலும் உறுதுணையாக இருந்தது இந்தச் சங்கம்தான். இது சர்வதேச அமைப்பு. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் சிங்களர்களும்

அடங்குவர்.

முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள், முகாம்களிலிருந்து ஊர் திரும்பியவர்களுக்கு அவர்களுடைய பழைய வீடுகளே கிடைத்தனவா, அவர்கள் பழையபடி வேலையில் ஈடுபட முடிகிறதா, தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதெல்லாம் விவரமாக எதுவும்

தெரிவிக்கப்படவில்லை.

அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் இலங்கை அரசிடம் தகவல் தெரிவித்து பதிவு செய்து கொண்ட பிறகே சேவையைத் தொடங்க வேண்டும், அது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் பொருந்தும் என்று இந்த மாத முற்பகுதியில் இலங்கை அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. பதிவு செய்யாமல் தவிர்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் அரசு கூறியிருக்கிறது. இதைப் பார்க்கும்போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இனி தொடர்ந்து கண்காணிப்புக்கும் அரசின் கெடுபிடிக்கும் உள்ளாகும் என்பது தெளிவாகிறது.

2009 மே மாதம் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரில் சுமார் 70,000 பேர் இறந்ததாக அரசின் தகவல் தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது

குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

Nov 15, 2010

தண்ணீர் மட்டுமல்ல சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு





பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை. எனவே, சந்திரனுக்கு செல்வது இயலாத செயல் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் மட்டும் இல்லாமல், வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட தனிமங்களும் அதிகளவில் அங்கு கலவையாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா, மனிதனை சந்திரனுக்கு அனுப்ப முயற்சி செய்து வந்தன. இதில், அமெரிக்கா முதலில் வெற்றி பெற்றது. கடந்த நூற்றாண்டில், 1969ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கி சாதனை படைத்தார். இதை தொடர்ந்து, பல முறை விண்வெளி வீரர்கள், ஆளில்லாத ராக்கெட்டுகள் பறக்க விட்டு சந்திரனில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் சந்திரனுக்கு சந்திரயான் -1 என்ற ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்தது. சந்திரனை சுற்றி வந்த சந்திரயான்-1, பல்வேறு கோணங்களில் சந்திரனை படம் எடுத்து அனுப்பியது. அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று கண்டுபிடித்தனர்.இந்நிலையில், சந்திரனில் அதிகளவில் தண்ணீர் உள்ளது என்று தெரிய வந்தது. மேலும், பல்வேறு தனிமங்களும் உள்ளன என்றும், குறிப்பாக, வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு ஆகியவை அதிகளவில் கலவையாக இருப்பது உணர்வு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு சந்திரனில் மோத செய்து அதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சந்திரனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறியதாவது:சந்திரனில் லேசான ஹைட்ரோ கார்பன்கள், கந்தகம், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இருப்பது உணர்வு செயற்கைக்கோள் மோதியதில் தெரிய வந்துள்ளது. சந்திரனில் காணப்படும் பெரிய பள்ளங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதும், அந்த பள்ளங்களின் பரப்பில் 5.6 சதவீதம் தண்ணீர் இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை சந்திரனைப்பற்றி தெரியாத நிலையில், உணர்வு செயற்கைக்கோள் சந்திரனின் இருட்டுப் பகுதியில் மோதிய வேகத்தில் 10 கி.மீ., உயரத்திற்கு தூசிகள் கிளம்பின. இதில், உறை நிலையில் நிரந்தரமாய் தண்ணீர் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் காணப்படும் "கேபஸ்' என்ற பெரும் பள்ளத்தில் இருந்து எழும் தூசிகள் குறித்த தகவல்களை அறிய உலகின் பல இடங்களில் உள்ள தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன. சந்திரனில் பல முறை விண்கற்கள் மோதி பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சந்திரனில் காணப்படும் நூறு கிலோ மீட்டர் அகலம் நான்கு கி.மீ., ஆழம் உள்ள பெரும் பள்ளத்தில் ராக்கெட்டை மோத விட்டு ஆய்வு செய்ய நாசா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 585 கிலோ எடையில் ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இந்த ராக்கெட், சந்திரனில் காணப்படும் பெரும் பள்ளத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மோதுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

த்தத்தை தவிர்க்க பிரபாகரனிடம் விண்ணப்பித்தோம் ஆனால் ஏமாற்றமே: தயா மாஸ்டர்

ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்குமாக விண்ணப்பம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தின் ஒரு பிரதியை பாலகுமாரன் என்னிடம் அப்போது காட்டியிருந்தார். ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என்று புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு சாட்சியமளித்த தயா மாஸ்டர் மேலும் கூறியதாவது :

நான் ஒரு காலத்தில் புலிகளின் ஊடகத்துறையில் இணைப்பாளராகச் செயற்பட்டேன். புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் கீழே இந்த ஊடகப் பிரிவு வருகின்றது. புலிகள் அமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் அந்த அமைப்பை விட்டு நான் வெளியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். காரணம் பேச்சுவார்த்தைகளை முறிப்பதன் மூலமும் புறக்கணிப்பதன் மூலமும் மக்களின் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது என நான் உணர்ந்திருந்தேன். அதனால்தான் அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தேன்.

போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது எண்ணிலடங்காத மக்கள் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கு மத்தியிலும் சிக்கிய நிலையில் பலர் உயிரிழந்தனர். எனது குடும்பமும் நானும் பல தடவைகள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்டு வந்தோம். 2009 ஜனவரியில் போர் எங்கு நடைபெறும் என்ற வரையறை இல்லாமலிருந்தது. அதன் பரிமாணம் விரிவடைந்தது. மக்கள் அங்கலாய்த்தவர்களாகக் காணப்பட்டனர். உயிரிழப்புக்கள் இடம்பெற்றன.

ஒவ்வொருவரும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சித்தமையே உண்மை நிலைமையாகும். அந்தக் காலகட்டங்கள் வாழ்வில் மறக்கமுடியாதவை. தப்புவதற்கு முயற்சித்த பல்லாயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். அந்தச் சந்தர்ப்பங்களை நினைத்து வருந்துகிறேன்.

எப்படியோ போன உயிர்களைத் திருப்பிப்பெற முடியாது. ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தோம்.ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா விடயத்தில் அரசாங்கத்துக்கு வழிசமைத்துள்ள ஆங்சான் சூகியின் விடுதலை : ரணில்

மியன்மாரை விட ஜனநாயக குணாதிசயங்கள் நிறைந்த நாடாக இலங்கை திகழ்கின்றபோதிலும், அந்த குணாதிசயங்கள் இன்றைய அரசாங்கத்திலும் இந்நாட்டிலும் இருக்கின்றனவா? என்பதை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் இராணுவ ஆட்சியின் 15 வருட வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூகி மீதான இந்த நடவடிக்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடயத்தில் இன்றைய அரசாங்கத்துக்கு ஒரு வழிகாட்டலாக அமைந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மியன்மாரின் ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு வென்றவராவார். இவருக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக் காவல் சிறையிலிருந்து அவர் விடுதலை பெற்றிருப்பதானது ஜனநாயகத்தை மதிக்கின்ற உலக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கடந்த 21 வருட இராணுவ ஆட்சிக் காலத்தில் சுமார் 15 வருடங்கள் வீட்டுக் காவல் சிறையில் வைக்கப்பட்ட இவர் தமது சுதந்திரத்தைப் பறிக்கப்பட்டவராகவே இருந்தார்.

நாம் உட்பட உலகில் ஜனநாயகத்தை விரும்புகின்ற சகலரும் வெவேறு விதங்களில் மியன்மார் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்த நிலைமை காணப்பட்டது.

இருப்பினும் இந்த வலியுத்தல்களையும் கேளிக்கைகளையும் மியன்மார் அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

எது எப்படியிருப்பினும் இறுதியில் ஜனநாயகமே வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் சுயாதிபத்தியம் என்ற போர்வையில் ஜனநாயகத்தை முடக்குகின்ற ஆட்சியாளர்களை நாம் இனம்கண்டு கொள்ள வேண்டும்.

சுயாதீனம் என்று கூறி மக்களின் சுயாதீனத் தன்மைக்கு எதிராக செயற்படுவதானது ஒரு நிர்வாகத்தின் சுயாதீன ஆட்சியாக இருக்க முடியாது.

விடுதலை பெற்றுள்ள ஆங் சான் சூகி சுதந்திர உலகில் பிரவேசித்து ?? ஜனநாயக ரீதியிலான ??? சகல அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து மியன்மாருக்கு தேவையான ஜனநாயகம் தொடர்பில் அவரது பயணம் அமைய வேண்டுமென்பது எமது பிரார்த்தனையாகும். உலகின் பல்வேறுபட்ட நாடுகளில் பல அரச தலைவர்கள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக ஜனநாயகத்தை மிதித்து ஆட்சி நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் அவ்வாறான முயற்சிகள் சதாகாலத்தும் இல்லை என்பதை இந்த சம்பவத்தினூடாக மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மியன்மாரிலும் பார்க்க இலங்கை ஜனநாயகம் நிறைந்த நாடாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற நாடாகவும் எமது நாடு இருக்கின்றது. எனினும் அது இன்றைய நிலை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய சூழலுக்குள் தள்ளி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் மேற்படி ஆங் சான் சூகியின் விடுதலை ஒரு வழிகாட்டலாக அமைந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்க அரசு தவறியுள்ளது : சஜித்

சஜித் பிரேமதாஸ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் துரித நிவாரண சேவை களை வழங்குவதற்கு தவறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அரிசியினை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஐ.தே.கட்சி எம்.பி.யான சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்ததுடன் நிவாரணங்களையும் வழங்கினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந் புதன்கிழமை இரவு 8.00 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.00 மணிவரையிலான 12.00 மணித்தியாலங்களாக பெய்த கடும் மழையினால் நாட்டின் பல பாகங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் மேல் மாகாணமே அதிக பாதிப்புக்குள்ளானது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாணத்தில் இவ்வெள்ளத்தத்தினால் 70 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அரசாங்கம் துரித நிவாரண சேவைகளை வழங்கவில்லை.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதனை பார்த்துக்கொண்டு ஒரு ஓரத்தில் இருக்க முடியாது. அம்மக்களின் சுகதுக்கங்களில் பங்கெடுத்து எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஸானாவின் மன்னிப்புக்கு வீட்டு எஜமானருடன் கலந்து பேசுங்கள்: சவூதி மன்னர்

சவூதி அரேபியாவில் ரிஸானா நபீக் என்ற பணிப்பெண் பணிபுரிந்த வீட்டு எஜமானருடன் கலந்துபேசி ரிஸானாவுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ், அந்நாட்டின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மரண தண்டனையிலிருந்து ரிஸானாவை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அனுப்பிய கருணை மனுக் கோரிக்கைகளையடுத்தே சவூதி மன்னர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மூதூரைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கு ரியாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இருந்தபோதும் பல்வேறு காரணங்களால் அவருக்கு மன்னிப்பளிக்குமாறு ஹொங்கொங்கை தளமாக கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை என்பனவும் பல்வேறு புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்விடயத்தை ராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது. இதனடிப்படையில், ரிஸானாவுக்கு கருணைகாட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸிற்கு கடிதமொன்றை அனுப்பினார். ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரரக அதிகாரிகளினால் மன்னர் மாளிகையிடம் ஒப்படைக்கப்பட்ட இக்கடிதம் தொடர்பாக சவூதி மன்னர் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் வேறுசில காரணங்களினாலும், ரிஸானா விடயத்தில்சவூதியின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எவ்வாறிருந்தபோதிலும் அங்கிருந்து கிடைக்கும் பிரதிபலிப்புகள் சாதகமானவையாக தோன்றுவதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கவும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்குமாக, அவர் பணிபுரிந்த வீடு எஜமானரும் மரணித்த குழந்தையின் பெற்றோருமாகிய அல் ஒடாபி தம்பதிகளுடன் இது விடயமாக கலந்துரையாடுமாறு சவூதி அதிகாரிகளுக்கு மன்னர் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்ட பெற்றோர் சம்மதிக்கும் பட்சத்தில் இரத்த உறவுக்கான நஷ்ஈட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் லிட்ரோ கேஸ் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

'லிட்ரோ கேஸ்' நிறுவனம் இலங்கையில் தனது சேவையை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது என அரசாங்க வர்த்தக நிலையத் திணைக்கள இயக்குனர் பி.எம்.எஸ். படகொட தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

" எல்.பி கேஸின் பங்குகளில் 49 வீத பங்குகளை இலங்கை இன்று உத்தியோகபூர்வமாக முழுமையான உரிமை பெறுகிறது. எல்.பி கேஸின் பெயர் லிட்ரோ கேஸாக மாற்றப்பட்டதை தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் இன்று தெரிவு செய்யப்படுவர்.

லிட்ரோ கேஸ் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் உடைமையாக்கபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது " என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

லெப்டோஸ்பைரோஸிஸ் எனும் எலிக்காய்ச்சல் நாடளாவிய ரீதியில் தீவிரமாக பரவி வருகின்றது என தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 627 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி பிரிவின் புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.

எலிக்காய்ச்சலினால் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வயல்வெளிகளில் இருந்து எலிக்காய்ச்சல் நேரடியாக பரவுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாவர். இது தொற்றுநோய் அல்ல. ஆனால் ஒரு மிருகத்திலிருந்து இன்னொரு மிருகத்திற்கு பரவும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆசியாவிலேயே வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நடாக இலங்கை உள்ளது : விமல்

ஆசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இலங்கை இருப்பதாக வீடமைப்பு மற்றும் பொது சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் இடம் பெற்ற தேசிய உணவுகளைப் பிரபல்யப்படுத்தும் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதயாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த விமல், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் விதத்தில் பல பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

அத்துடன் இன்றைய இலங்கைக்கும் முன்னனைய இலங்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இன்று நாம் வாழும் நாடு ஒரு புதிய நாடு. பல வருடங்களாக எம்மை வாட்டிய யுத்தததை முடிவுக்கு கொண்டுவந்த பின் உருவாக்கப்பட்டுள்ள அமைதியான நாடு இது வாகும்.

இவ்வாறான பண்புகளைக் கொண்ட ஒரு நாட்டில் வாழும் குடிமக்களுக்கு பல கடமைகள் உண்டு. தேசிய உணர்வுகளுடன் கூடிய தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் அரச திட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். கோதுமை மா இல்லா விட்டால் எம்மால் வாழ முடியாது என்ற கோட்பாட்டை சிலர் முன்வைக்கின்றனர். ஆனால் இது ஒரு மனோ நிலையாகும். தற்போது எமது பேக்கரிகளில் அரிசி மாவை பாவித்து பாண் தயாரிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

எனவே அரிசி மாவை கோதுமை மா போன்று மெதுமையாக மாற்றக் கூடிய மத்திய நிலையங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். எனவே வெகு விரைவில் அரிசி மா பேக்கரிகள் இயங்கத்தொடங்கும்.

இலங்கையில் உண்மையான தேசிய நோக்குள்ள அரசாங்கமே தற்போதே உள்ளது. நாட்டின் அனைத்து துறையிலும் தேசியத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். விவசாயத்தறையில் இரசாயன பசளை பாவிப்பதையும் நிறுத்த வேண்டும்;;. என்றும் அவர் கூறினார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்கா மத்திய மாகாண விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்;;ஸ ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தினர்.
மேலும் இங்கே தொடர்க...

பொது மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய பரிந்துரையை ஆணைக்குழு முன்வைக்கும் : சி.ஆர்.டி. சில்வா

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாங்கள் மேற்கொண்ட விசாரணை அமர்வுகளின் போது பொது மக்கள் வெளியிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய வகையிலான பரிந்துரையை நல்லிணக்க ஆணைக்குழு முன்வைக்கவுள்ளது. காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுதீர்வு காண்பது அவசியம் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறையில் நடைபெற்ற போது அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்றுறையில் அமர்வு இடம்பெற்றது. இதில் பொது மக்கள் பலர் சாட்சியமளித்தனர். இந்நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:

உங்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் நாங்கள் அக்கறையுடன் இருக்கின்றோம். கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று நாங்கள் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தோம். இன்று (நேற்று) அமர்வுகளின் இறுதிநாளாகும். இம்மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை எங்களிடம் எடுத்துக் கூறினர். எமது உணர்வுகளை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்.

உங்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடியவாறான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். உங்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து நாங்கள் அவற்றை மதிப்பிட்டு வருகின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைப்போம். 30 வருட கால பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது அவசியம்.
மேலும் இங்கே தொடர்க...

Nov 7, 2010

நகை வாங்குவதுபோல் நடித்து 25 பவுன் நகை திருடிய பெண் கைது: ரகசிய கேமரா காட்டிக்கொடுத்தது




வியாசர்பாடி மார்க்கெட் அருகே “மேத்தா ஜுவல்லரி” என்ற பெயரில் நகை கடை உள்ளது. தீபாவளியையொட்டி, தங்கநகை வாங்குவதற்காக நேற்று முன்தினம் இங்கு அதிக அளவில் கூட்டம் இருந்தது. ஏராளமான பெண்கள் நகையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பெண் தங்க சங்கிலி, வளையல் ஆகியவற்றை திருடி ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்தார். இதை நகைக்கடை அதிபர் சம்பத்ராஜ் ரகசிய கேமரா மூலம் பார்த்தார். உடனே கடையின் கதவு மூடப்பட்டது. நகை திருடிய பெண்ணை கடை ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது வியாசர்பாடி நகைக்கடையில் 9 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதுதவிர சர்மா நகரில் உள்ள ”மகேந்திரா ஜுவல்லர்ஸ்” என்ற நகை கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து 5 பவுன் மாலையை மடியில் மறைத்து வைத்து திருடியதாகவும் கூறினார்.

இதுதவிர மேலும் 11 பவுன் நகை திருடியதாகவும் தெரிவித்தார். அந்த பெண்ணிடம் இருந்து 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அயனாவரத்தை சேர்ந்த அவளது பெயர் தாட்சாயணி (37) என்பதும், நகை கடைகளில் தொடர்ந்து கைவரிசை காட்டியதாகவும் கூறினார். அவளை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.

இதுதவிர கொடுங்கையூர் நாராயணசாமி தெருவில் வசிக்கும் சந்திரசேகர் என்ப வருடைய வீட்டிலும் 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. வணிக வரித்துறை அதிகாரியான இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றபோது, யாரோ வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடி உள்ளனர்.

புதுவண்ணாரப்பேட்டை டி.எச். ரோட்டைச் சேர்ந்தவர் மாலா (37). விதவைப் பெண். இவரது கணவர் ஸ்ரீதர் கடந்த ஆண்டு இறந்து போனார்.

கணவரின் நினைவிடம் கல்பாக்கத்தில் உள்ளது. நேற்று அவரது நினைவு நாள். இதையொட்டி மாலா கணவரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார்.

இரவில் வீடு திரும்பிய மாலா வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சென்னையில் விலை ஏற்றம் ஒரு முருங்கைக்காய் 10 ரூபாய்



சென்னைக்கு தினமும் ஒரு லாரி அளவுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு வரும். ஆனால் இப்போது சீசன் இல்லாத காரணத்தால் முருங்கைக்காய் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மழை காலமாக இருப்பதால் பூக்கள் உதிர்ந்து முருங்கைக்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் தற்போது குஜராத் மாநிலத்தில் இருந்து தான் கோயம்பேடுக்கு முருங்கைக்காய் வருகிறது.

தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரு முருங்கைக்காய் 6 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோ 60 ரூபாய்க்கு கிடைத்தது.

ஆனால் இன்று முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கு விலை உயர்ந்து விட்டது. இதனால் ஒரு சிறிய முருங்கைக்காய் 10 ரூபாய்க்கும், நீட்ட முருங்கைக்காய் 15 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல் தக்காளி கிலோ ரூ.16-க்கும், கேரட் ரூ.40-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும் விலை உயர்ந்துள்ளது. முள்ளங்கி, நூல் கோல் இன்று மார்க்கெட்டில் இல்லை.

கடந்த 2 நாட்களாக லீவு நாள் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று கூட்டமே இல்லை. காய்கறி வாங்க ஆள் இல்லாததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

காசி மேட்டில் கழுத்தை அறுத்து ரவுடி படுகொலை; தீபாவளி விருந்துக்கு அழைத்து இன்னொரு ரவுடி வெறிச்செயல்


புளியந்தோப்பு பி.கே. காலனியில் வசித்து வந்தவர் துர்கைவேல் (வயது 28) பிரபல ரவுடி. இவர் மீது எண்ணூர், புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று மாலையில் காசிமேடு மீன்பிடித்துறை முகம் கடற்கரையில் துர்கைவேல் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசிங் விரைந்து சென்று துர்கைவேலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

கொலையுண்ட துர்கைவேல் இதற்கு முன்பு காசி மேடு காசிமாநகரில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி பவுடர் ரவியுடன் இவருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இதன் பின்னர் துர்கைவேல் புளியந்தோப்பில் குடியேறினார். ஆனால் பவுடர் ரவி, துர்கைவேல் மீதான பகையை மறக்காமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் இன்னொரு நண்பர் மூலமாக துர்கைவேலை தீபாவளி விருந்துக்காக புவடர் ரவி அழைத்துள்ளார்.

இதை நம்பி துர்கைவேல் காசிமேடு மீன்பிடிதுறை முகத்துக்கு சென்றார். அங்கு வைத்து புவுடர் ரவியும் அவனது கூட்டாளிகளும் துர்கை வேலை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.

புவுடர் ரவியை போலீசார் கைது செய்தனர். கூட்டாளிகளான தேசப்பன், இன்னொரு தேசப்பன், கார்த்திக் 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட பவுடர் ரவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் துர்கைவேலுக்கும் தகராறு இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு எனது படகை துளை போட்டு கடலில் மூழ்கடித்து விட்டான். இதனால் அவன் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டேன். எங்கள் திட்டப்படி நண்பர்கள் துர்கைவேலை அழைத்து வந்தனர். மது விருந்து கொடுத்து போதையில் இருந்த போது கழுத்தை அறுத்து கொன்றோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசத் துரோக வழக்கு: முஷாரபுக்கு நோட்டீஸ்

முன்னாள் அதிபர் முஷாரபுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு லாகூர் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2007-ம் ஆண்டு முஷாரப், நாட்டில் நெருக்கடிநிலையை பிரகடனப்படுத்தியது தேசத் துரோகம் என்று கூறி லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருக்கும் முஷாரப், இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இதை எதிர்த்து ஒருவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் முஷாரப் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுமாறு மனுதாரர் கோயிருந்தார். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், முஷாரபுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
மேலும் இங்கே தொடர்க...

மழைக்காலம் முடிந்ததும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்: ப.சிதம்பரம்

போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டும் பணிகள் மழைக்காலம் முடிந்ததும் தொடங்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை காலையில் ப.சிதம்பரம் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

இலங்கை அதிபர் ராஜபட்ச தில்லி வந்தபோது, அவருடன் விவாதிக்கப்பட்ட விஷயங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தேன். வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்த 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்கிற திட்டம் முன்னேற்றத்தில் உள்ளது.

விரைவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ராஜபட்சவிடம் நாங்கள் வற்புறுத்தியிருக்கிறோம்.

மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி தந்துள்ளனர்.

மீனவர்கள் கைது: இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இந்த ஆண்டில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார். ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர புதிதாக யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.

ஒபாமா வருகை: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முழுப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவரது வருகையால் இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை அவரது பயணம் முடிந்த பிறகுதான் கூற முடியும். இந்திய-அமெரிக்க உறவு சீராக இருக்கிறது.

இன்னும் வலுப்படுமா என்பதை பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூற முடியும் என்றார் ப.சிதம்பரம்.
மேலும் இங்கே தொடர்க...

பாக்., அதிபர் சர்தாரி இலங்கை பயணம்


கொழும்பு : பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, அரசு முறை பயணமாக இம்மாதம் இலங்கை செல்கிறார். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அரசு முறை பயணமாக இம்மாத இறுதியில் இலங்கைக்கு செல்கிறார். அவருடன், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் இலங்கை செல்கின்றனர்.

அங்கு, பாக்., அதிபர் சர்தாரி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது, பாதுகாப்பு, வணிகம் குறித்த பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் என்றும், இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிகிறது. இஸ்லாமாபாத் - கொழும்பு இடையிலான பயணம் தொடர்பாக திட்டமிடப்பட்டு வருவதாகவும், பயணம் இறுதி செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நேபாள மாவோயிஸ்டுகளிடம் இந்திய நக்சலைட்கள் பயிற்சி


காத்மாண்டு : இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் நக்சலைட்களுக்கு, நேபாள மாவோயிஸ்டுகள் பயிற்சியளிக்கும் விவரம் தெரியவந்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவும் உதவி வருகிறது.

சமீப நாட்களாக இந்தியாவில் நக்சலைட் வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவர்களால் உள்நாட்டு பாதுகாப்பு பெரும் பிரச்னையாகி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் செயல்படும் நக்சலைட்களுக்கு நேபாள மாவோயிஸ்டுகள் பயிற்சியளித்து வரும் விவரம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் இந்தியாவில் செயல்படும் நக்சலைட் அமைப்புகளில் ஒரு பிரிவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)க்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தும் விவரங்கள் அடங்கிய ஆவணங்களையும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரும் கடிதத்தையும் நேபாள அரசிடம் இந்தியா கொடுத்துள்ளது.

இக்கடிதம் மற்றும் ஆவணங்களை, நேபாளத்திற்கான இந்திய தூதர் ராகேஷ் சூத், நேபாள உள்துறை அமைச்சர் பீம் ரவால் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஜாதா கொய்ராலா ஆகியோரை சில நாட்களுக்கு முன் சந்தித்துக் கொடுத்துள்ளார்.இந்திய தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில், நேபாள மக்கள் விடுதலை ராணுவத்திடம் இந்திய நக்சலைட்கள் பயிற்சி பெறுவது தொடர்பாக உளவுத்துறையினர் சேகரித்துள்ள விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பயிற்சிக்கு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உதவுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதங்கள் மற்றும் ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."இந்தியாவில் செயல்படும் நக்சலைட் அமைப்புகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என, நேபாள மாவோயிஸ்டுகள் இதுவரை கூறி வந்தனர். அது பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

Nov 4, 2010

ரூ.1 கோடி கேட்டு 2 பேர் கடத்தல்: 4 விரல்களை துண்டித்து அனுப்பிய கடத்தல்காரர்கள்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பதேபூர் சிக்ரி என்ற புராதன நகரைச் சேர்ந்தவர் அனில்குமார். தொழில் அதிபரான இவரது உறவினர்கள் ரஜத், கவுரவ், ஆகியோர் கடந்த மாதம் 15-ந்தேதி காலையில் பால் வாங்குவதற்காக சென்றனர்.

அப்பேது ஜீப்பில் வந்த கடத்தல் கும்பல் இருரையும் தாக்கி ஜீப்பில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் அனில் குமாருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

ஆனால் அந்த அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய அனில்குமார் ரூ.25 லட்சம் வரை தர சம்மதித்தார். இதை கடத்தல் கும்பல் ஏற்றுக் கொள்ள வில்லை.

இதுபற்றி அனில்குமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல் கும்பல் பற்றி விசாரணை நடத்தி 2 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனில் குமாருக்கு மீண்டும் கடத்தல் காரர்களிடம் இருந்து போன் வந்தது. அதில் பேசியவன் உங்களுக்கு தீபாவளி பரிசாக ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறேன். அந்த பார்சல் சுடுகாடு அருகே கிடக்கிறது. போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.

உடனே அனில்குமார் பதறியடித்துக் கொண்டு சுடுகாட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு பார்சல் கிடந்தது. அதை பதட்டத்துடன் பிரித்துப் பார்த்த போது 4 விரல்கள் துண்டித்து வைத்து அனுப்பப்பட்டு இருந்தது.

கடத்தல் கும்பல் அனில் குமாரை மிரட்டவே கை விரல்களை துண்டித்து அனுப்பியுள்ளது. இது பற்றியும் அனில்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் கை விரல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவை கடத்தப்பட்டவர்களின் கை விரல்கள் தானா ? என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவை பரி சோதனைக்காக சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்தரகுர்ஜார் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளை கும்பல் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி இது போன்ற கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது கடத்தப்பட்டவர்கள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பதட்டத்தில் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நடுவானில் பறந்தபோது விமான பாகம் உடைந்து விழுந்தது; 459 பயணிகள் தப்பினர்






சிங்கப்பூரில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. 459 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்டு 5-வது நிமிடத்தில் விமானத்தில் ஒருபக்க எந்திரத்தில் உள்ள மேல்பகுதி பாகம் உடைந்து விழுந்தது.

உடனே பைலட் விமானத்தை திருப்பி சிங்கப்பூரில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளிக்கிழமையில் தீபாவளி லட்சுமி வழிபாடு-பலன்கள் குளியல்-தீபம் ஏற்ற உகந்த நேரம்




வெள்ளிக்கிழமையில் தீபாவளி லட்சுமி வழிபாடு-பலன்கள் குளியல்-தீபம் ஏற்ற உகந்த நேரம்
திரைப்படம் திரைப்படம்
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் அமாவாசை இருந்தாலும் நாளைதான் முழுமையான சர்வ அமாவாசை ஆகும். இந்த தீபாவளி வெள்ளிக்கிழமை அன்று வருவது கூடுதல சிறப்பு வாய்ந்த தாகும். இதுபற்றி பிரபல வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணிபாரதி கூறியதாவது:-
இந்த தீபாவளி சித்திரை நட்சத்திரத்தில் வருவதும் சந்திரன் வெள்ளிக்கிழமை வீட்டில் இருப்பதும் நட்சத்திர அதிபதி ஆட்சியாக விருச்சிகத்தில் இருப்பதால் குருவால் பார்க்கப்படுவதால் இந்நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சுக்கிரனுக்கு உகந்தநாள் வெள்ளிக்கிழமை ஆகும். சுக்கிரன் அதிதேவதை மகாலட்சுமி. எனவே மகாலட்சுமியை நாளை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெறலாம்.

தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தீபாவளி நாளில் கேதார கவுரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

தீபாவளி அன்று குளியல், புத்தாடை உடுத்துதல், தீபம் ஏற்றுதல் கேதார கவுரி விரதம் போன்றவற்றை செய்ய உகந்த நேரம் வருமாறு:-

நாளை மாலை பிரதோஷ காலத்தில் அமாவாசை இருக்கும் நேரத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். எனவே நாளை மாலை 5.41 (சூரிய அஸ்தமனம்) முன்பே தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

நாளை அஷ்டமசுத்தியும், குருபார்வையும் உடைய கன்னியா லக்கனத்தில் அதிகாலை 2.45 மணிக்கு மேல் அதிகாலை 4.45 மணிக்கு முன்னர் தலை குளியல், புத்தாடை உடுத்துதல் நல்லது.

தீபாவளி அன்று செய்யும் மகாலட்சமி பூஜை மிகவும் சிறப்பானது. இப்பூஜையை மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை செய்யலாம்.

வெள்ளிக்கிழமை நாளில் தீபாவளி கொண்டாடப்படுவதால் அனைவரும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிலும் ரிஷபம், துலாம், ராசி லக்னக்காரர்கள் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் அசைவத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு யோகஸ்ரீ மணிபாரதி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

Nov 3, 2010

இலங்கை அகதிகளிடம் பண மோசடி: நாகப்பட்டினத்தில் 3 பேர் கைது



நாகப்பட்டினம், நவ.3: வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, இலங்கை அகதிகளிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினத்தில், அகதி முகாம்களில் இருந்து வெளியேறி வந்த இலங்கை அகதிகள் 14 பேர் போலீசாரால் நேற்று பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களை அகதி முகாம்களில் இருந்து வெளியேற்றி அழைத்து வந்ததாகவும், வெளிநாடுகளில் கொண்டு போய் விட்டுவிடுவதாகவும் கூறி, அகதிகளிடம் இருந்து பண பெற்று மோசடி செய்த 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

மீட்கப் பட்ட இலங்கை அகதிகள் அனைவரும் மீண்டும் பத்திரமாக அகதி முகாம்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

அணிலை குழந்தையாக வளர்க்கும் அதிகாரி ராமராக கருதி வழிபடும் பக்தர்கள்





சென்னை சந்தாமணி ஆர்.வி, நகரைச் சேர்ந்தவர் மோகணேஷ். தனியார் நிறுவன மேலாளராக உள்ளார். இவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.இவர் தனது வீட்டில் அணில் ஒன்றை குழந்தை போல வளர்த்து வருகிறார். அவர் எங்கு சென்றாலும் அணிலும் அவரது தோளில் தொற்றிக் கொள்கிறது.

அவர் உணவு கொடுத்தால்தான் சாப்பிடுகிறது. அவர் வெளியூர் சென்று விட்டால் எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறது.

இதனால் இந்த அணிலை அவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார். அணில் ராமபிரான் வாகனம் என்பதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று அதை வழி படுகிறார்கள். அணிலை பார்த்ததும் ராமரை நேரில் பார்த்ததாகவே கருதி மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறார்கள். இதுபற்றி மோகணேஷ் கூறியதாவது:-

நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு 3 அணில் குட்டிகளை வளர்த்தேன். அதில் 2 இறந்து விட்டன. தற்போது இந்த அணில் மட்டும்தான் உயிருடன் உள்ளது.

இதை நானும் குடும்பத்தினரும் குழந்தை போல வளர்த்து வருகிறோம். நாங்கள் என்ன சொல்கிறோமோ அதன்படி நடக்கும். அதற்கு எல்லாமே புரிகிறது.

தினமும் அணிலுக்கு உணவாக பால், ஆப்பிள், கேக், திராட்சை போன்றவற்றை கொடுக்கிறோம். கேக்கை விரும்பி ருசித்து சாப்பிடுகிறது. இதனால் தினமும் அணிலுக்காக ஒரு கேக் வாங்குகிறேன்.

அணிலுக்கு உடல்நிலை சரி இல்லாவிட்டால் எங்கள் குடும்பமே கவலையில் மூழ்கி விடும். உடனே அதை தூக்கிக் கொண்டு செல்லப்பிராணிகள் மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிப்போம்.

அணில் ராமபிரானின் வாகனம் என்பதால் அக்கம் பக்கத்தினர் கூட்டமாக வந்து அதை பார்த்து வழி படுகிறார்கள். இதை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அணிலை நோய்க் கிருமிகள் தொற்றாமல் இருக்க வெந்நீரில் டெட்டால் கலந்து தினமும் அதை துணியில் நனைத்து துடைத்த விடுவோம்.

பெரும்பாலும் அணிலை அவ்வளவு எளிதில் பிடித்து விட முடியாது. வேகமாக ஓடும் தன்மை கொண்டது.

அப்படிப்பட்ட அணில் எங்களை விட்டு பிரியாமல் இருப்பது ராமபிரானின் அனுக்கிரகமாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்ற குஜராத் தம்பதி கைது; சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்கள்


சென்னை விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஒரு விமானம் வந்தது.

அதில் இருந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண்ணும் அவரது கணவரும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த தம்பதியினர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் போலி பாஸ்போர்ட்டை வைத்து கனடாவுக்கு செல்ல முயன்றதால் மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் சிக்கிய தம்பதியரின் பெயர் விஷால்குமார் பட்டேல் (30), சினேகல் (27). கணவன், மனைவி இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் 27-ந்தேதி மும்பையில் இருந்து சுற்றுலா விசாவில் இந்த தம்பதியினர் மலேசியா சென்றுள்ளனர். அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்றபோது மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அதை கண்டுபிடித்து விட்டனர்.

அதை தொடர்ந்து விஷால் குமார் பட்டேல்-சினேகல் ஆகியோரை சென்னைக்கு திருப்பி அனுப்பி விட்டனர். சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

கணவன்-மனைவி இருவரையும் சென்னை விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, பத்மநாபன் ஆகியோர் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கல்லால் அடித்து கொல்லும் தண்டனை மாற்றம்: ஈரான் பெண்ணுக்கு இன்று தூக்கு

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சகினே மொகமதி ஆஸ்தியானி. கணவரை கொலை செய்ததாகவும், வேறு ஒரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், இந்த தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது. கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்தியானி. தற்போது தெக்ரானில் உள்ள தாப்ரிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே, பொதுமக்கள் மத்தியில் இவரை கல்லால் அடித்து கொல்ல அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு உலக நாடுகளும், சமூகசேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்பு வலுவடைந்ததை தொடர்ந்து இந்த தண்டனையை ஈரான் அரசு கை விட்டது. மாறாக கணவரை கொலை செய்த குற்றத்துக்காக அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இந்த நிலையில், அவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்தியானயை கல்லால் அடித்து கொல்ல விதிக்கப்பட்ட தண்டனை எதிர்த்து போராடிய உலக நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. இது ஜெர்மனியில் இயங்குகிறது.

இதற்கிடையே, தூக்கு தண்டனை இன்று நிறைவேற்றப்படுமா? என தெரிய வில்லை. இது குறித்து ஈரான் அதிகாரிகளிடம் நிருபர்கள், கேட்டனர். அதற்கு பதில் சொல்ல அவர்கள் மறுத்து விட்டனர். தண்டனை இன்று நிறைவேற்றப்படலாம் அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என்று மழுப்பலாக பதில் அளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சந்திரனுக்கு எந்திர மனிதனை அனுப்ப “நாசா” திட்டம்


சந்திரனுக்கு மீண்டும் விஞ்ஞானிகளை அனுப்ப அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அதிக அளவு செலவாகும் என கருதி அதிபர் ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.

இந்த நிலையில், சந்திரனுக்கு எந்திர மனிதனை (ரோபாட்) அனுப்ப “நாசா” முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹீவ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மைய நாசா என்ஜினீயர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித குணங்களை கொண்ட எந்திர மனிதனை சந்திரனுக்கு பாதுகாப்பாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணி 1000 நாட்களில் முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...