Nov 3, 2010

இலங்கை அகதிகளிடம் பண மோசடி: நாகப்பட்டினத்தில் 3 பேர் கைது



நாகப்பட்டினம், நவ.3: வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, இலங்கை அகதிகளிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினத்தில், அகதி முகாம்களில் இருந்து வெளியேறி வந்த இலங்கை அகதிகள் 14 பேர் போலீசாரால் நேற்று பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களை அகதி முகாம்களில் இருந்து வெளியேற்றி அழைத்து வந்ததாகவும், வெளிநாடுகளில் கொண்டு போய் விட்டுவிடுவதாகவும் கூறி, அகதிகளிடம் இருந்து பண பெற்று மோசடி செய்த 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

மீட்கப் பட்ட இலங்கை அகதிகள் அனைவரும் மீண்டும் பத்திரமாக அகதி முகாம்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

No comments:

Post a Comment