கொழும்பு : பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, அரசு முறை பயணமாக இம்மாதம் இலங்கை செல்கிறார். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அரசு முறை பயணமாக இம்மாத இறுதியில் இலங்கைக்கு செல்கிறார். அவருடன், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் இலங்கை செல்கின்றனர்.
அங்கு, பாக்., அதிபர் சர்தாரி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது, பாதுகாப்பு, வணிகம் குறித்த பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் என்றும், இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிகிறது. இஸ்லாமாபாத் - கொழும்பு இடையிலான பயணம் தொடர்பாக திட்டமிடப்பட்டு வருவதாகவும், பயணம் இறுதி செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment