Nov 15, 2010

இலங்கையில் லிட்ரோ கேஸ் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

'லிட்ரோ கேஸ்' நிறுவனம் இலங்கையில் தனது சேவையை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது என அரசாங்க வர்த்தக நிலையத் திணைக்கள இயக்குனர் பி.எம்.எஸ். படகொட தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

" எல்.பி கேஸின் பங்குகளில் 49 வீத பங்குகளை இலங்கை இன்று உத்தியோகபூர்வமாக முழுமையான உரிமை பெறுகிறது. எல்.பி கேஸின் பெயர் லிட்ரோ கேஸாக மாற்றப்பட்டதை தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் இன்று தெரிவு செய்யப்படுவர்.

லிட்ரோ கேஸ் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் உடைமையாக்கபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது " என்றார்.

No comments:

Post a Comment