Nov 3, 2010

போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்ற குஜராத் தம்பதி கைது; சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்கள்


சென்னை விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஒரு விமானம் வந்தது.

அதில் இருந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண்ணும் அவரது கணவரும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த தம்பதியினர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் போலி பாஸ்போர்ட்டை வைத்து கனடாவுக்கு செல்ல முயன்றதால் மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் சிக்கிய தம்பதியரின் பெயர் விஷால்குமார் பட்டேல் (30), சினேகல் (27). கணவன், மனைவி இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் 27-ந்தேதி மும்பையில் இருந்து சுற்றுலா விசாவில் இந்த தம்பதியினர் மலேசியா சென்றுள்ளனர். அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்றபோது மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அதை கண்டுபிடித்து விட்டனர்.

அதை தொடர்ந்து விஷால் குமார் பட்டேல்-சினேகல் ஆகியோரை சென்னைக்கு திருப்பி அனுப்பி விட்டனர். சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

கணவன்-மனைவி இருவரையும் சென்னை விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, பத்மநாபன் ஆகியோர் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment