Nov 24, 2010

பொன்சோகவிற்கு சிறையில் உடற்பயிற்சி கருவிகள்






இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறையில் உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்க நடந்த சண்டையை தலைமை ஏற்று நடத்தியவர், முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இவர் அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிட்டார். இதை தொடர்ந்து இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ராணுவ கோர்ட் இவருக்கு 30 மாத சிறை தண்டனை அளித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலை படை தாக்குதலில் பொன்சேகா பலத்த காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட உடல் பாதிப்புகள் காரணமாக, தற்போதும் அவர் மருந்துகள் உட்கொண்டு வருகிறார். உடல் நலத்தை பேணுவதற்கு வசதியாக உடற்பயிற்சி கருவிகளை அவருக்கு வழங்கும் படி கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தற்போது உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் தண்ணீர் கசிவதால் கூரையை பழுது பார்க்கும் பணி நடக்கிறது.

No comments:

Post a Comment