தேசிய பாதுகாப்பு தினத்தில் பத்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த மக்களின் நலன்களில் அக்கறையுடன் ஊடகங்கள் வாயிலாக செய்திகளைப் பிரசுரித்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்காக நல்ல சிந்தனைகளை வெளிப்படுத்திய மைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
இவ்விருதை தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார், தினக்குரல் உதவி ஆசிரியர் பா. கிருபாகரன், லக்பிம சாந்தினி புஷ்பா சமரக்கொடி, லக்பிம சுனித்திரா ஜீவணி மிதிமதுர, அஞ்சலா முத்துத்தம்பி உட்பட பத்துப் பேர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு நல்கிய யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவுக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
No comments:
Post a Comment