Dec 12, 2010

மெக்சிகோ துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் பலி

மேற்கு மெக்சிகோவில் இரு குழுவினரிடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெலிஸ்கோ நகரில் வருடாந்த மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேருக்கு நேர் துப்பாக்கிப்பிரயோகம் நடைபெறுகையில் பொதுமக்கள் அச்சத்துடன் பாதுகாப்பு தேடி ஓடியுள்ளனர். இதன்போது சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்படும் மோதல் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment