Dec 26, 2010

குண்டுவீச்சு: வடகொரிய வீரர்கள் குஷி


பீஜிங் : தென்கொரியத் தீவு மீது, தங்கள் நாட்டு படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதைப் பார்த்து, சந்தோஷம் அடைந்து அந்த வெற்றியைக் கொண்டாடியதாக, வடகொரிய ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வடகொரிய "டிவி' நிலையம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடகொரிய ராணுவ வீரர்கள் சிலர்,"நாங்கள் சந்தோஷத்தில் கூச்சலிட்டோம். எங்கள் வாழ்வை உயர்த்தி விட்டோம். எங்கள் கொரிய மக்கள் ராணுவத்தின் தலைவருக்காக (வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல்) நாங்கள் போராடுவோம். எங்களை முதலில் தாக்கிய எதிரியை பழி வாங்கும் நடவடிக்கையைத் துவக்கி விட்டோம்,'' என்றனர். வடகொரியாவின் தாக்குதல் குறித்து, அந்நாட்டு ராணுவ வீரர்கள் "டிவி'யில் தோன்றி பேட்டியளிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment