Dec 13, 2010

தமிழ் ஊடகவியலாளரைத் தாக்கியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் - பா.அரியநேத்திரன்

நாட்டில் சுமுகமான நிலை தோன்றியுள்ள இக்காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் ஊடகவியலாளர் மாணிக்கபோடி சசிக்குமார் (வயது 35) இனந்தெரியாத குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கப்பட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே பா. அரியநேரத்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இத்தாக்குதலானது பொதுமக்கள் மத்தியில் அச்ச சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இவ்வாறான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். உரிய தரப்பினர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment