Dec 26, 2010

வானுவாத்து நாட்டில் பயங்கர நிலநடுக்கம்


சிட்னி : பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள வானுவாத்து நாட்டில், நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என, பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த 2004 டிசம்பர் 26ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பெரும் சுனாமியால் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பேர் இறந்தனர். சுனாமி தாக்குதலின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அருகிலுள்ள வானுவாத்து நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஹவாய் தீவில் இயங்கிவரும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதில், கடல் அலைகள் பற்றிய பதிவுகள், சுனாமி ஒன்று உருவானதைக் காட்டுகின்றன. அதனால், சுனாமி அலைகள் கடலோரப் பகுதிகளைத் தாக்கக் கூடும்' என, குறிப்பிட்டிருந்தது. ஆனாலும், நிலநடுக்கத்தால் கடலில் வழக்கத்தை விட சற்று அதிக உயரத்தில், அலைகள் உருவானதே தவிர பெரிய அளவில் சுனாமி தாக்கவில்லை. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், எவ்வித பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

No comments:

Post a Comment