Sep 13, 2010

அரேபியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் சென்றபோது விமானத்துக்குள் ரகசியமாக ஆண் குழந்தை பெற்ற பெண்; குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு ஓட்டம்








அரேபிய நாட்டில் இருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். இதை தொடர்ந்து விமானத்துக்குள் இருந்த குப்பைத் தொட்டியை சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர்கள் அதை வெளியே எடுத்து வந்தனர்.

விமானத்தை விட்டு இறங்கியதும் அந்த குப்பையை ஊழியர்கள் தரம் பிரித்தனர். அப்போது அதில் சிறிது நேரத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை ஒன்று டிஷ்சு பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விமான நிலைய டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். உடனே நர்சுடன் டாக்டர் அங்கு விரைந்து வந்தார். பேப்பரில் சுற்றப்பட்டிருந்த அந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

அக்குழந்தை சிறிது நேரத்துக்கு முன்புதான் பிறந்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ரத்தம் கூட காயாமல் அப்படியே இருந்தது. விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் பயணி ரகசியமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

உடனே அக்குழந்தையை மணிலா விமான நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து நர்சுகள் சுத்தம் செய்தனர். மேலும் உடலை பரிசோதித்தனர். அது மிகவும் உடல் நலத்துடன் உயிருடன் இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கப்படடது. அதை குடித்தவுடன் அக்குழந்தை லேசாக அழ தொடங்கியது. பின்னர் அக்குழந்தை நினோய் அகினோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சமூகசேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே விமானத்தில் கள்ளத்தனமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை கண்டு பிடிக்கும்படி பிலிப்பைன்ஸ் சமூக நலத்துறை செயலாளர் சரிமன் உத்தரவிட்டுள்ளார்.

அப்பெண் யார் என கண்டறிந்து அவளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், இது ஒரு கிரிமினல் குற்றம் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா மீதான விசாரணை : 2ஆவது இராணுவ நீதிமன்றம் இன்று

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் நடத்தவென நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று முதல் 6 நாட்களுக்குத் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவச் சட்டத்திட்டங்களை மீறியது தொடர்பில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த நீதிமன்றம் கூட்டப்பட்டது.

நீதிமன்றம் இறுதியாகக் கடந்த 10ஆம் திகதி கூடியது. இதன் போது சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் சமூகமளிக்காத நிலையில், அது இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நிருபமா 16இல் அமெரிக்கா பயணம்

இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், எதிர்வரும் 16ஆம் திகதி அமெரிக்கா செல்லவிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வரவிருப்பது தொடர்பான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்வது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் நிருபமா பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஒபாமா எதிர்வரும் நவம்பர் 9 முதல் 11ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவரது வருகையின்போது, இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காகவே நிருபமா அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசா கட்டண உயர்வு, வெளிப்பணி ஒப்படைப்பு தடை விவகாரம், உயர் தொழில்நுட்ப ஏற்றுமதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளுடன் நிருபமா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நியூயோர்க் செல்லவுள்ளார். இவருடன் நிருபமாவும் அக்கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. தலைமையகத்துக்கு முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள் சத்தியாக்கிரகம்?

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு எட்டப்படுகின்ற வரையில் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு அதன் தலைமைத்துவம் தீர்வு காண்பதற்கு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையெனத் தெரிவித்து அக்கட்சியின் எம்.பி.க்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என சகல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டமும் ஏற்பாடாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடந்த 8 ஆம் திகதி புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அதேவேளை மேலும் 25 எம்.பி.க்களைக் கொண்ட குழு பாராளுமன்றத்தில் தனித்து செயற்படவிருப்பதாகவும் அந்தக் குழுவிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய விருப்பதாகவும் அந்தக் குழு அறிவித்துள்ளது.

அத்துடன் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கோ அல்லது உள் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்கோ தலைமைத்துவம் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் தலைமைத்துவத்தை மாற்றியமைத்து கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளின் தகவல் அடங்கிய கணினி திருட்டு : கனேடியத் தமிழ் காங்கிரஸ் தகவல்



சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த இலங்கை அகதிகளின் தகவல்கள் அடங்கிய கணினி திருடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதிகளின் பயண ஆவணங்கள், தொடர்பு எண்கள், பிறப்பு சான்றிதழ்கள் என்பனவும் திருடப்பட்டுள்ளன.

டொரன்டோவில் காரியாலயத்தினுள் கடந்த சனிக்கிழமை புகுந்த சிலர், இலங்கை அகதிகள் குறித்த தகவல்கள் பதியப்பட்டிருந்த கணினியை திருடிச் சென்றுள்ளாதாக தமிழ்த் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குமிடையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளதாகத் கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாளபிள்ளை தெரிவித்துள்ளார்.

கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இலங்கை அகதிகள் குறித்த விவரங்களைத் திரட்டுவதற்குத் தடைவிதித்திருந்தது.

இந்நிலையிலேயே இந்தத் தகவல்கள் திருடப்பட்டுள்ளன எனவும், இதனால் அகதிகளின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரியாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து சிலர் குறித்த தகவல்களைத் திருடிச் சென்றுள்ளமையை, டொரன்டோ காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது ஒரு திட்டமிடப்பட்ட திருட்டு என தெரிவித்துள்ள அவர், மேற்படிக் காரியாலயத்தில் பல கணினிகள் இருந்த போதும், குறித்த தகவல்கள் அடங்கியது மட்டும் திருடப்பட்டிருப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கையில் உள்ள அகதிகளின் குடும்பங்கள், அவர்களுடன் தொடர்புகளை பேணி வந்தனர். எனவே உடனடியாக இது தொடர்பாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான் கைப்பற்றிய சீனப் படகு பணியாளர்கள் இன்று விடுவிப்பு

தான் கைப்பற்றிய சீனப் படகில் இருந்த 14 பணியாளர்களை ஜப்பான் இன்று விடுதலை செய்தது. எனினும் அக்கப்பலின் மாலுமியை விடுதலை செய்ய அது மறுத்துவிட்டது.

மேற்படி சீனப் படகு, கடந்த வாரம் கிழக்கு சீன கடல்பகுதிக்கு அருகில் வைத்துக் கைப்பற்றப்பட்டது. இப்பகுதி, சீன - ஜப்பான் நாடுகள் உரிமை கோரி வரும் பிரச்சினைகுரிய ஒரு பிரதேசமாகும்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய படகுகளுடன் மேற்படி சீனப் படகு மோதியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமது கண்காணிப்பு நடவடிக்கையில் மேற்படி படகு இடையூறு விளைவித்ததாகக் கூறி ஜப்பான் இப்படகினை தடுத்து வைத்திருந்தது.

மேற்படிச் சம்பவம் சீன மற்றும் ஜப்பானுக்கிடையே பாரிய முறுகல் நிலையை தோற்றுவித்திருந்தது.

இரு நாடுகளுக்கிடையில் எரிவாயு அகழ்வு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...