Sep 14, 2010

முல்லைத்தீவு மீனவருக்காக ஐஸ் தொழிற்சாலை, வெளிச்ச வீடு நிர்மாணம்






முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் நலன் கருதி ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் வெளிச்ச வீடு ஆகியவற்றை நிர்மாணிக்கவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடிக் குடும்பங்களுக்குத் தேவையான மீன் பிடிப் படகுகளை அமைச்சுக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த மீனவர்களின் நலனை கருத்திற்கொண்டு ரெஜிபோம் பெட்டிகள் பொருத்தப்பட்ட 65 சைக்கிள் களும் 50 தோணிகளும் கையளிக்கப் பட்டுள்ளன. நாளாந்தம் பிடிக்கும் மீன்களை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டே வேல்ட் விஷனின் ஒத்துழைப் புடன் ஐஸ் உற்பத்தி நிலையம் ஒன்றை முல்லைத்தீவில் அமைத்துக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள தென்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 13 மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது குறைகளை ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கனடா சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் திருட்டு




கடந்த மாதம் ‘சன் கூ’ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் களவாடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளை ரொரன்டோ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தில் இருந்த கணனி ஒன்றும் களவாடப்பட்ட நிலையிலேயே எம்.வி. சன். சீ கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் 492 இலங்கைத் தமிழர்கள் தொடர்பான விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக அப்பேரவை குற்றஞ்சாட்டி உள்ளது.

இத்திருட்டு சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது என்றும் இத்தமிழர்கள் குறித்த ஆவணங்கள் மாத்திரமே திருடப்பட்டிருக்கின்றன என்றும் இது ஒரு திட்டமிட்ட திருட்டு வேலை என்றும் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி இன்று கேள்வி




இலங்கையின் புதிய நிலைமைகள் தொடர்பிலான விவாதமொன்று இன்று செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.

வாய்மூல கேள்வி நேரத்தின் போது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயதுறையிடம் கேள்விகள் கேட்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பிலும் இலங்கையுடனான பிரிட்டனின் தற்போதைய உறவு தொடர்பிலும் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஏனைய வெளிவிவகாரத்துறையிடம் அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...