Sep 16, 2010

விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை கர்ப்பபை: குழந்தை இல்லாதவர்களின் பிரச்சினைக்கு தீர்வு




பெண்களுக்கு கர்ப்பபையில் கோளாறு ஏற்பட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது பெண்களுக்கு அதிக அளவில் கர்ப்பபை புற்று நோய் ஏற்படுகிறது. அவர்களுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

இவர்களுக்கு உதவும் வகையில் விஞ்ஞானிகள் செயற்கை கர்ப்பபையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள புரோன் பல்கலைக்கழகம் மற்றும் பெண்கள்- குழந்தைகள் ஆஸ்பத்திரி மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக ஆய்வு செய்து இதை உருவாக்கி உள்ளனர்.

உடல் தசையில் இருந்தே இதை உருவாக்கி இருக்கின்றனர். இதை பெண்கள் உடலில் பொருத்தி கருவை வளர்க்க முடியும். செயற்கை கர்ப்பபை வெற்றிகரமாக அமைந்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பசில் தலைமையில் யாழ். மாவட்ட மீளாய்வுக் கூட்டம் முதற் தடவையாக தமிழ்க் கூட்டமைப்பும் பங்கேற்பு


யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் செயலகத்தில் இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் வடமாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதில் கலந்து கொண்டார். யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.

இந்தக் கூட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, வட மாகாண பொது நிர்வாக செயலாளர் தி. இராசநாயகம், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ. சரவணபவன், இ. சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பிரதேச சபை செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் பசில் மேலும் கூறியதாவது:

தீவகம் பண்ணை - வேலணை வீதியும் கட்டுவன், தொண்டைமானாறு பிரதான வீதிகள் விரைவில் மீள்புனரமைப்பு செய்யப்படும். அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

வலிகாமத்தில் 1990 களில் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு (வலி. வடக்கு) மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்து அபிவிருத்திகள் செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன்.

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்படுவதற்கான பாரிய திட்டமிடலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

துறைசார்ந்த திணைக்களங்களுக்கு ஏற்கனவே இனம் காணப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கு முழு மையாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகளை திணைக்களங்களின் தலைவர்கள் முன்வைக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் சர்வதேச விஞ்ஞான ஆய்வு நிலையம்


சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையமொன்றை இலங்கையில் நிறுவத் தீர்மானித்துள்ளதாக தொழில்நுட்ப விஞ்ஞான ஆராய்ச்சித்துறை அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று அமைச்சரின் தலை மையில் செவ்வாயன்று கொழும்பில் நடை பெற்றதுடன் சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான விஞ்ஞானத்துறை முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கருத் திட்டத்தின் கீழ் இலங்கையின் மின் வலு, கடல், வான், வர்த்தகத்துறைகளை விஞ்ஞானத்துறையுடன் இணைந்ததாக முன்னேற்றும் வகையில் மேற்படி சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையம் இலங்கையில் அமைக்கப்பட வுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச மட்டத்திலுள்ள விஞ்ஞான ஆராய்ச்சித்துறை நிபுணர்களை இணைத்துக்கொண்டு துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்ட ங்களை மேற்கொள்ளவும் கைத்தொழிற் துறையை முன்னேற்றவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

விஸா காலாவதி: பிரான்ஸ் தம்பதி காலியில் கைது


விசா காலாவதியான நிலையில் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி, கோட்டை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காலி கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

காலி மஜிஸ்ட்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை இம்மாதம் 23ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா வைத்திருக்கவில்லை. கடந்த 4ம் திகதியுடன் இவர்களது விசா காலாவதியாகியுள்ள நிலையில் இவர்கள் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான காரணங்களைக் கூற தவறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் ஆண் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். (42 வயது), பெண் மடகஸ்கரைச் சேர்ந்தவர் (23 வயது).

இருவரும் மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடமராட்சி கிழக்கில் மீள் குடியேறும் மக்களுக்காக அடிப்படை வசதிகள்

வடமராட்சி கிழக்கில் மீள்குடியேறிவரும் மக்களின் நலன் கருதி அரசின் பல்வேறு நல சேவைத் திட்டங்கள் நேற்று முன்தினம் (செவ்வாய்) பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அரச நிர்வாகத் தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறு நலச் சேவைகள் இதில் அடங்குகின்றன. ஆழியவளை – பருத்தித்துறை, ஆழியவளை - கொடிகாமம் ஆகிய பாதைகளுக்கான பஸ் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் செம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, வடமராட்சி கிழக்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வத்திராயன் கிளை, மருதங்கேணி அரசினர் கிராமிய வைத்தியசாலை ஆகிய சேவைகள் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அத்துடன் யுத்தத்தினால் சேதமடைந்த பருத்தித்துறை பிரதேச சபையின் செம்பியன்பற்று அலுவலகம் புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைப்பதற்கு அத்திவாரக் கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.

இதுதவிர படையினால் ஆழியவளையி லும் உடுத்துறையிலும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இரு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

புதுக்குடியிருப்பு பிரிவில் மீள்குடியேற்றம் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மக்களை மீள் குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைதீவு அரச அதிபர் வேத நாயகம் நேற்று கூறினார். இதன்படி முதலில் விஸ்வமடு மேற்குப் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 989 பேர் மீள் குடியேற்ற ப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு பிரதேசத்திலே புலிகள் பெருமளவான ஆயுதங்க ளையும் மிதிவெடிகளையும் புதைத் தனர். இதனால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேற்றும் பணிகள் தாமதமடை ந்தன. இராணுவம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பல குழுக்கள் இப்பகுதியில் மிதி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடு த்தப்பட்டன.

இதன்படி முதற் தடவையாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக் கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள தோடு அடுத்து விஸ்வமடு கிழக்கில் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ள தாகவும் அரச அதிபர் கூறினார். இந்த வார இறுதிக்குள் விஸ்வமடு கிழக்கு பகுதி முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்து க்காக கையளிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதேவேளை முல்லைத்தீவு மாவ ட்டத்தில் சுமார் 60 வீதமான மீள்குடியேற்றப் பணிகள் நிறை வடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது. துணு க்காய், மாந்தை மேற்கு பகுதிகளில் மீள்குடியேற்றும் பணிகள் முழு மையாக நிறைவடைந்துள்ளதோடு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மட்டும் மீள்குடியேற்றம் எஞ்சியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாவில் மீளக்குடியேற 150 சிங்கள குடும்பங்கள் விண்ணப்பம்

யாழ். குடா நாட்டில் மீளக்குடி யேறுவதற்கு 150 சிங்களக் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ்ப்பாண பாதுகாப்பு படையின் சிவில் விவகார பொதுசன அலுவலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த 150 குடும்பங்களின் உறுப்பினர்களும் இடம் பெயர்ந்து அனுராதபுரம், மிஹிந்தல போன்ற பல இடங்களில் நண்பர்கள், உறவினர்களின் இருப்பிடங்களில் தற்போது தங்கி இருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். குடா நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த இந்த சிங்களக் குடும்பங்களின் உறுப்பினர்களே திரும்பவும் யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கின்றார்கள். இவர்களில் பலர் திருநெல்வேலி, கொழும்புத்துறை போன்ற பிரதேசங்களில் வசித்துள்ளார்கள்.

அவர்களது காணிக்கான உரிமைப் பத்திரங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிந்துள்ளார்கள்.
மேலும் இங்கே தொடர்க...