Sep 19, 2010

இந்திய பாதுகாப்பு குழு இலங்கை வருகை


இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது.

நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள இக்குழு வினர் பாதுகாப்பு அமைச்சு, வெளி நாட்டமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். அதனையடுத்து முப்படைத் தளபதிகள் மற்றும் பிரதம பாதுகாப்பு அதிகாரியையும் இக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இவர்கள் கல்விச் சுற்றுலாவொன்றி ற்காகவே இலங்கை வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல நேற்றுத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹசலக்க சுற்றுலா பங்களா மீண்டும் அரசுடமை


ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் தனியார் துறையினருக்கு வாடகைக்காக வழங்கப் பட்டிருந்த ஹசலக்க நெல் சந்தைப் படுத்தும் சபைக்குரிய களஞ்சியசாலையின் சுற்றுலா பங்களாவை அரசாங்கம் நேற்று மீண்டும் பொறுப்பெடுத்தது.

இதனையடுத்து குறித்த சுற்றுலா பங்களாவில் நேற்றைய தினம் அம்பாறை பிரதேசத்திலிருந்து 10 லொறிகளில் கொண்டு வரப்பட்ட 150,000 கிலோ நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பொது முகாமையாளர் வஜிர பெரேரா தெரிவித்தார்.

சந்தைப்படுத்தல் சபையின் பொது முகாமையாளர் மற்றும் ஹசலக்க பொலிஸார் ஆகியோர் இணைந்து இந்த பங்களாவை பொறுப்பேற்றனர்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் குறித்த பங்களா தனியார் துறையினருக்கு சொந்தமான முறையில் வழங்கப்பட்டது போல் இருந்து வந்துள்ளது.

கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து நெல் சந்தைப் படுத்தல் சபையின் தலைவர் கே.டீ. ஜயசிங்க ஆகியோர்களினது ஆலோசனை யின் பேரில் நேற்று இந்த பங்களா மீண்டும் அரச உடமையாக மாற்றப்ப ட்டிருப்பதாக பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாவனைக்கு உதவாத 300 கிலோ பழங்கள் கொழும்பில் அழிப்பு மாநகர சபையின் திடீர் சோதனையில் கண்டுபிடிப்பு

கொழும்பு மனிங் சந்தையில் பழங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள், அவற்றை பழுக்க வைக்கவும் பாதுகாத்து வைக்கவும் இரசாயன பதார்த்தங்களை சேர்த்து வருவதாக தெரிய வந்துள்ளதையடுத்து கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவதானமாக உள்ளனர்.

கடந்த வார இறுதியில் மனித பாவனைக்கு ஒவ்வாத 300 கிலோவுக்கு மேற்பட்ட பழ வகைகள் அழிக்கப்பட்டதாக பிரதான மருத்துவ அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டின் உணவு சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் அதனை மீறும் உணவுச் சாலைகளின் சொந்தக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்த சட்டம் வழி வகுகிறது.

இவ்வாறு காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை, அயடின் சேர்க்கப்படாத உப்பை விற்றமை, பழுதான பழங்கள், தேயிலை ஆகியவற்றை விற்றமை மற்றும் பழங்களை உரியநேரத்துக்கு முன்னர் பழுக்க வைக்கும் வகையில் சில வகை இரசாயன பொருட்களை பயன்படுத்தியமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 18 வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்று டொக்டர் காரியவசம் மேலும் கூறினார்.

கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கடந்த வார இறுதியில் நடத்திய திடீர் சோதனைகளின் போது 114 விற்பனை நிலையங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் போது பெறப்பட்ட தேயிலை, மிளகாய்த் தூள், பழங்கள் காய்கறிகள், கருவாடு, இறால், நெத்தலி ஆகியவற்றின் 150க்கு மேற்பட்ட மாதிரிகள் தற்போது பரிசோதிக் கப்பட்டு வருவதாகவும் இதன் முடிவுகள் தெரியவரும் போது மேலும் சில வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் 6 இலங்கை மீனவர் விடுதலை; 46 தொடர்ந்தும் தடுப்பில்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 6 இலங்கை மீனவர்கள் மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் பயணம் செய்த படகு கடந்த பெப்ரவரி 21ம் திகதி இந் திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிர வேசித்து மீன்பிடித்தல் ஈடுபட்டிருந்ததுடன் போதை வஸ்து கடத்தலிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டனர். மேற்கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக குறிப்பிட்ட மீனவர்கள் பயணம் செய்த படகு தடுத்து வைக்கப்பட்டு மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட் டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபி விருத்தி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்று கூறுகிறது. இந்த மீனவர்களை விமான மூலம் இலங்கைக்கு அழைத்துவர அமைச்சுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவாகியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள படகை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 46 மீனவர்களும் 13 படகுகளும் இந்தியாவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன. எனினும் இதற்கு முன் தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டின் பேரிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பூநகரியில் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மீண்டது குறித்து சாட்சியமளித்தோர் விபரிப்பு


பூநகரி பிரதேசத்தில் மீளகுடியேறிய மக்களின் சாட்சியங்களைப் பெறுவதற்காக கற்றறிந்த பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கம் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று பிற்பகல் பூநகரி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சொந்தக் கிராமங்களிலிருந்து முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டு வந்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பொது மக்கள் விபரித்தனர்.

அரசாங்கம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயங்களில் புலிகள் தமது நிலைகளைப் பலப்படுத்துவதற்கான வழி ஏற்பட்டிருந்தது. மக்களை பணயமாக அவர்கள் வைத்திருந்ததால் பாதுகாப்பு படையினருக் கும், புலிகளுக்குமிடையிலான மோதலில் தாம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தாகச் சுட்டிக் காட்டினர்.

புலி களின் பிடியிலிருந்து மீண்டு இராணு வத்தினரிடம் பாதுகாப்புக்காக சென்று விடுவதற்கு புலிகளுடன் பெரும் போராட் டம் நடத்த வேண்டி இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் நேற்றுக் காலை கண்டாவளை பிரதேச செயலக அலுவல கத்திலும் நடைபெற்றது. அங்கு சாட்சிய மளிக்கவென சுமார் நூறு பேரளவில் வந்திருந்தனர்.

பூநகரியிலும் சுமார் நூறு பேரளவில் சாட்சியமளித்தனர்.

நேற்று பிற்பகல் பூநகரியில் மக்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. இரண்டு இடங்களிலும் சாட்சியமளித்தவர்கள் காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளைக் கண்டு பிடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் முறைபாடுகளை பெற்றுக் கொண்ட ஆணைக்குவின் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் பூநகரி மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு சென்ற ஆணைக்குழு உறுப்பினர்கள் சங்குப்பிட்டி இறங்கு துறையையும் பார்வையிட்டனர்.

இன்றைய தினம் (20ம் திகதி) முல்லைத்தீவில் விசாரணை இடம்பெறு கின்றது.
மேலும் இங்கே தொடர்க...