Sep 26, 2010

இலங்கை வடக்கில் உள்ளாட்சித் தேர்தல்

கொழும்பு, செப்.26: இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தலை நடத்துவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.

இதை அந்நாட்டின் செய்தித்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்ல ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: வடக்குப் பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் 90 சதவீதம் பேர் அவர்களது சொந்த ஊர்களிலேயே மறு குடியமர்த்தப்பட்டுவிட்டனர். இன்னும் 10 சதவீதம் பேர் முகாம்களில் தங்கியியுள்ளனர். அவர்களையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சதவீதம் பேரும் விரைவில் மறுகுடியமர்த்தப்படுவர்.

இந்த பணி நிறைவடைந்ததும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தப்படும். வடக்குப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அப்பகுதி உள்ளாட்சி அமைப்பு 30 ஆண்டுகளாகச் செயல்படவில்லை. முடங்கிக்கிடந்தது. வடக்குப் பகுதியில் தேர்தல் நடைபெறாததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்குரிமை நசுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்துவதன் மூலம் அப்பகுதியின் உள்ளாட்சி அமைப்பு புத்துயிர் பெறவுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஜனநாயகம் நிலைநாட்டப்படவுள்ளது. இத்தேர்தலில் நிச்சயம் மக்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாணத் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் வெளியே சுதந்திரமாக வந்து அச்சமின்றி வாக்களிக்கலாம். அவர்கள் தேர்தல் மூலம் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று கெஹெலிய ரம்புகவெல்ல தெரிவித்தார்.

""வடக்குப் பகுதியில் 2009-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் யாரது பெயரெல்லாம் இருந்ததோ, அவை அப்படியே இருக்கின்றன. யார் பெயரும் நீக்கப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று அந்நாட்டு தேர்தல் துணை ஆணையர் பி.எம். சிறிவர்தன் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இறை நம்பிக்கை உடல் நலத்துக்கு நல்லது: ஆய்வில் தகவல்




பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சமூகநல ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஸ்கெய்டில் ஒரு ஆய்வு மேற்கொண்டார். அதில் இறைவழிபாட்டில் நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் சிறந்த உடல்நலத்துடன் விளங்குகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இறைவழிபாட்டில் ஆழ்ந்த 423 பேரிடம் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 96 பேர் மதமாற்றம் ஆகினர். 54 பேர் இறைவழிபாட்டில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டனர். ஆனால் முழுமையான இறைவழிபாட்டில் ஈடுபட்டவர்கள் சமூகநலம், உடல்நலம் மற்றும் நன்னடத்தையில் சிறந்து விளங்கினர்.

இதன்மூலம் இறைவழிபாடு உடல்நலத்துடன் மனநலத்தையும் வளர்க்கும் என ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெடி விபத்துக்கள் நடக்கும்:இலங்கைக்கு பெரும் அபாயம்

இலங்கை போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள பெரும்பாலான வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, கரடியனாறில் நடந்தது போல, எதிர்காலத்தில் மேலும் பல வெடி விபத்துகள் நடக்கலாம்' என, தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையில் சமீபத்தில் கரடியனாறு என்ற இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிர்பாராதவிதமாக வெடித்தன. இதில் 27 போலீசார் உயிரிழந்தனர். சாலை கட்டுமான பணிகளுக்காக சீன நிறுவனம் ஒன்றால், போலீஸ் ஸ்டேஷனில் இந்த வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாக பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி:இலங்கையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீத போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் தான் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு லட்சம் கிலோ வெடிபொருட்கள், எந்தவித பாதுகாப்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளன. எனவே, கரடியனாறில் நடந்தது போன்ற, மேலும் பல வெடிவிபத்துகள் எதிர்காலத்தில் நிகழும் அபாயம் நிலவுகிறது. இதை தவிர்ப்பதற்காக, போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வெடிபொருட்களை, சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றுவது குறித்து, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

“ஒபாமா உலக வில்லன்” ஈரான் வர்ணனை






அணுசக்தி கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு தனியார் டெலிவிஷனுக்கு பேட்டிஅளித்தார். அப்போது, அணு சக்தி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்க்க அது உதவும்.

ஈரானும் அதை விரும்பும் என கருதுகிறேன். உலக நாடுகளும் அதையேதான் விரும்புகின்றன என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா.சபை பொது கூட்டத்தில் ஈரான் அதிபர் மகமத் அகமதினேஜாத் பேசினார்.

அப்போது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய குடியரசுகளின் மீது மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொண்டால் அணுசக்தி குறித்த புதிய பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்றார். இந்த நிலையில் ஷிராஷ் நகருக்கு வந்த ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலிலரிஜான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு உலக வில்லன். அவர் எப்படி ஈரானுக்கு உதவி செய்ய முடியும். அமெரிக்கர்கள் உலகம் முழுவதும் பழி பாவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, ஒபாமாவின் உதவி எங்களுக்கு தேவையில்லை. அவரது வார்த்தையில் உண்மை இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரி.வர்;த்தகர்கள் இலங்கையில் முதலிட ஆர்வம் வர்த்தக கவுன்சில் அமைப்பது குறித்தும் ஆராய்வு




நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிலுள்ள முக்கிய வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கலந்து ரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

அமெரிக்காவின் பிரபல வர்த்தகர்கள் பங்குபற்றிய கூட்டமொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றது. இதில் பிரபல வர்த்தகர்கள் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

விமான சேவை, பாதுகாப்பு, விருந்தோம் பல், சுற்றுலா மற்றும் பான வகைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் அங்கு கூடியிருந்தனர். கொக்கா கோலா, போயில், கூகுல், ஹில்டன் ஹோட்டல், ஸ்டார்வுட் ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளும் அதில் இருந்தனர்.

இதன்போது அமெரிக்க பிரபல வர்த்தகர்களை சந்தித்த ஜனாதிபதி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஒவ்வொருவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

இதற்கு அமெரிக்க வர்த்தகர்களும் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை தற்போது சிறந்த தகுதியுடைய நாடு என குறிப்பிட்டுள்ளார்.

மருந்து வகைகளை தயாரிக்கும் நிறுவனமான பைஸர் நிறுவனத்தின் முக்கியமான பிரதிநிதியொருவரின் கருத்துப்படி இருந்த வர்த்தக சந்திபானது அமெரிக்க மற்றும் இலங்கை வர்த்தக கவுன்ஸிலை உருவாக்கும் நிகழ்வாகக் கூட அமையலாம். வர்த்தக நிறுவனங்களையும் அரசாங்கங் களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாகக் கூட மாறலாம் என்ற நிலைப்பாட்டை அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டனர். அமெரிக்க வர்த்தக சமூகம் இந்த சந்திப்பின் போது இலங்கை அரசாங்க அதிகாரிகளையும் வர்த்தக பிர முகர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க முடிந்துள்ளமை பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க சிறப்பான வழியாகத் தெரிகிறது என்று பைஸர் நிறுவன அதிகாரி குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் சமாதான சூழலில் இடம்பெறும் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான வீடியோ விளக்கத்தையடுத்து இலங்கை ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டநாடு என்பதை அமெரிக்க வர்த்தக சமூகம் ஏற்றுக்கொண்டது.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாப் பயணத்துறையில் முதலிடத்தில் உள்ள நாடு என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இவ்வருட முற்பகுதியில் குறிப்பிட்டிருந்தது பற்றியும் அமெரிக்க வர்த்தகர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. சுற்றுலாத்துறையிலும் சூழல் நட்புடன் கூடிய சுற்றுலா, சுகாதார சுற்றுலா, ஆயுர்வேதம் மூலமான நோய் தீர்க்கும் சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா, இயற்கை சுற்றுலா என ஏற்படுத்த முடியுமென வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அங்கு விளக்கனார்.

இலங்கை வர்த்தக குழுவில் இடம்பெற்ற 15 வர்த்தக பிரமுகர்களுடன் அமெரிக்க வர்த்தக சமூகத்தினர் இங்கு ஒன்று கூடிப் பேசியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தூதுக்குழுவின் அமெரிக்க விஜயம் அந்தநாடு குறிப்பிடத்தக்க பொருளாதார வெற்றியை உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பெற்றுள்ள நிலையில், இலங்கையின் தனிநபர் வருமானம் கடந்த 5 வருடங்களில் இரட்டிப்பாகியுள்ள நிலையில் இடம் பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அண்மையில் இலங்கையை வளர்ந்து வரும் சந்தையுடன் கூடிய மத்திய வருமானத்தை பெறும் நாடு என மேம்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...