Sep 28, 2010

சரணடைந்த புலிகளை கொலை செய்ய பாதுகாப்பு செயலர் உத்தரவிட்டார் என தெரிவித்ததற்கெதிரான சரத் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்





வன்னியில் இறுதிக்கட்ட போரின் போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்த புலிகளின் முன்னாள் சிரேஷ்ட தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டதாக பொய்யான தகவல்களை சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கியதாக சரத் பொன்சேகாவுக்கு எதிரான தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகியது. மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகளின் குழு முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது. இன குரோதத்தை தோற்றுவிக்கும் வகையிலும் அரசிற்கு எதிராக காழ்ப்புணர்ச்சியை ஏற்படத்தும் வகையிலும் பொய்யான தகவல்களை வழங்கினார் என குற்றம் சுமத்தியே சட்டமா அதிபர் இந்த மனுவை சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளார். மனுதாரர்கள் சார்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் பிரட்ரிகா ஜேன்ஸ் உட்பட்டோர் மன்றில் ஆஜராகியிருந்தனர். இந்தநிலையில் இன்று சுகவீனம் காரணமாக பிரதிவாதியான சரத் பொன்சேகா மன்றில் ஆஜராவில்லை என அவரின் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அயோத்தி தீர்ப்புக்கு தடையில்லை அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயிக்கும் வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கடந்த அறுபது ஆண்டுகளாக அயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதன் பின்புலத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லக்னோ கிளை வழங்கவிருந்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அதற்கு முன்னர் வழங்கப்படாவிட்டால், வழக்கை மீண்டும் விசாரிக்கும் நிலை ஏற்படும்.

கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், இருதரப்பாரும் மீண்டும் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, தீர்ப்பை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரரில் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட பிறகு, மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமை வழங்கும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் வரவேற்றுள்ளன.

மிகுந்த பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழைமை மாலை 3.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சிறிலங்காவில் சமஷ்டி அரசியல் தீர்வு தற்போது தேவையில்லை - ஐக்கிய தேசியக் கட்சி

சிறிலங்காவில் சமஷ்டி முறைமையிலான அரசியல் தீர்வு தற்போது தேவைப்படவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. விடுதலைப்புலிகளுடன் சமஷ்டி முறையிலான தீர்வு தொடர்பில், இணக்கமும், போர்நிறுத்த ஒப்பந்தமும் செய்து கொண்டிருந்த ஐதேகட்சி, இப்போது ஆயுதம் தரித்த போராளிகள் இல்லாததால் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிபிசின் சிங்களச் சேவைக்கு ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அளித்த செவ்வியியொன்றின்போதே இத்தகைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இத தொடர்பில் மேலும் அறிகையில்; தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பதிலும் பார்க்க வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் அன்றாட விடயங்களுக்கு தீர்வுகாண்பதே இப்போது அவசிய தேவை. ஆயினும் மாகாண சபைகளை உருவாக்குவதற்கு வழிவகுத்த 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதற்கோ அல்லது திருத்துவதற்கோ ஐ.தே.க. ஆதரவளிக்கமாட்டாது.

அவர் அச்செவ்வியில் மேலும், 13 ஆவது திருத்தமானது இலங்கையின் அரசியலமைப்பின் ஓர் அங்கமாகவுள்ளது. அதற்கு நாம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம். 13 ஆவது திருத்தம் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதும், இதுவரை அத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. தற்போது இராணுவம் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின்னர் காலம் மாறிவிட்டதாகவும் ஆதலால் அத்தகைய அரசியல் தீர்வுக்கான தேவை இல்லையென தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

சிறிலங்காவில் பெரும்பாண்மைக் கட்சிகள் காலத்திற்குக் காலம் மாறிமாறித் தமிழ்மக்கள் பிரச்சனையில் பாதகமான முடிவுகளை எடுத்து வந்தனர். அதனால் எழுந்த பாரிய அழிவுகள் மொத்த நாட்டினைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியதை அனைவரும் நேரடியாகச் சந்தித்திருந்த போதும், அதற்குரிய சரியான தீர்வினைக் கண்டுகொள்ளாது காலம் கடத்துவதிலேயே கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளுடன் இணக்க ஒப்பந்தம் செய்திருந்த ஐதேகட்சி, அந்த வேளையிலேயே ஓப்பந்தத்திற்கு விரோதமாகச் செயற்படுவதாகவும், செயலற்ற பேச்சுவாரத்தைகள் மூலம், காலத்தை இழுத்தடிப்பதாகவும், விடுதலைப்புலிகள் குற்றச் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நியூயோர்க்கில் ஒற்றைச் சக்கரத்துடன் வெற்றிகரமாகத் தரையிறக்கினார் நிஜ ஹீரோ!

சினிமாக்களில் வரும் சண்டைக்காட்சிகளில் ஒற்றைச் சக்கரத்தில் வாகனங்களை ஒட்டி, பரபரப்பாவார்கள் சினிமாக் கதாநாயகர்கள். உண்மையில் விமானம் தரையிறக்கும் வேளை, சில்லில் ஏற்பட்ட கோளாறினால், 60 பயணிகளுடன் ஒரு விமானம் விபத்துக்குள்ளாக இருந்ததை தவிர்த்து, ஒற்றைச் சில்லுடன் விமானத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கியுள்ளார் ஒரு கதாநாயக விமான ஓட்டுனர்.

கடந்த சனிக்கிழமை டெல்டா எயர்லைனுக்கு சொந்தமான ஜெட் விமானம் நியூயோர்க் விமானத்தில் தரையிறங்க இருந்த போது இந்த நிகழ்வு நடந்தது. விமானம் தரையிறக்கும் நேரம் கியர் பழுதாகியது. தரையிறக்கும் சில்லுகளும் இயங்கவில்லை. ஒரே ஒரு சில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த பைலட் அந்த ஒரு சில்லை மட்டுமே பயன்படுத்தி வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கினார்.

இத்தனைக்கும் அந்த விமானத்தை அவர் ஓட்டிவரவில்லை . ஆபத்துக்கு உதவிபுரியும் உடனடி பைலட்டாக அந்த விமானத்தில் பயணம் செய்த 49வயதான டேவிட் ப்ரேடாதான் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாறையில் ஒக்டோபர் 3ஆம் திகதி அரசின் சேவை, அபிவிருத்திகள் தொடர்பான தெளிவூட்டும் விசேட மாநாடு

அரசாங்கத்தின் சேவைகளையும் அபிவிருத்தியின் பயன்களையும் மக்களுக்கு உரிய வகையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராமசேவை அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் விசேட மாநாடொன்று எதிர்வரும் ஒக் டோபர் முதலாம் திகதி அம்பாறையில் நடைபெறவுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் தலைமையில் நடைபெறும். அன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் 26 மில் லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள மஹா ஓயா பிரதேச செயலாளர் காரியா லயம் அமைச்சரினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

அரசாங்கம் மாவட்ட ரீதியில் முன்னெடுக் கும் அபிவிருத்தியின் பயன்களை மக்களுக்கு உரிய வகையில் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கும் கிராமசேவகர்களுக்கும் தெளிவுபடுத்தும் மாநாடுகள் மாவட்ட ரீதியாக நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இணக்க சபைக்கு கூடுதல் அதிகாரம்; ரூ. 2 1/2 இலட்சம் வரையான பிணக்குகளை விசாரிக்க முடியும்

இணக்கச் சபைகளின் ஊடாக இரண்டரை இலட்சம் ரூபா வரையிலான பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு செய்து தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

இது விடயமாக நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இணக்கச் சபைகளின் மூலம் இதுவரை காலம் 25 ஆயிரம் ரூபா வரை சம்பந்தப்பட்ட பிணக்குகள் மாத்திரமே விசாரணை செய்யப்பட்டன.

தற்போது இணக்க சபைகளின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. முறைப்பாட்டாளரும், பிரதிவாதியும் தமது சார்பில் இணக்க சபைக்கு ஒவ்வொரு பிரதிநிதியைத் தெரிவு செய்ய முடியும்.

பிரதேச செயலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள இணக்க சபைத் தலைவர்களில் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியும். இந்த மூவரின் தலைமையில் பிரச்சினை விசாரணை செய்யப்பட்டுத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். பொதுமக்கள் நீதிமன்றம் சென்று அலைக்கழிவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.இதற்கென இணக்க சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்கென நீதி பிரதியமைச்சர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நேற்று (27) காலை நீதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத், இணக்க சபை ஆணைக் குழுவின் மேலதிகச் செயலாளர் திருமதி கமலினி சில்வா, பதில் செயலாளர் அரந்தர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பெரும்போக நெற் செய்கைக்கென ரூ. 15,000 மில். உரம் இறக்குமதி

எதிர்வரும் பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான உர வகைகளை 15 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் ஏற்கனவே இறக்குமதி செய்துள்ளது.

இந்த உரத்தை விவசாயிகளுக்கு நேர காலத்துடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் தேவையான உர வகைகள் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது தடவை இதுவாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் த்ரும்போகத்தின் போது 7 இலட்சத்து 46 ஆயிரம் ஹெக்டயர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் யூரியா உரம் ஒரு இலட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் தொன்னும், பொட்டா சியம் உரம் 67 ஆயிரம் மெட்ரிக் தொன்னும், பொட்டேஸ் உரம் 60 ஆயிரம் மெட்ரிக் தொன்னும் பெரும்போக நெற் செய்கையின் போது தேவைப்படுவதாக விவ சாய அமைச்சின் செயலாளர் ஈ.கே.

கருணாதிலக்க கூறுகிறார். தேவையான உர வகைகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் முன்னரைப் போலன்றி இம் முறை விவ சாயிகளுக்குத் தேவையான உர வகைகள் அனைத்தையும் நேர காலத்துடன் கொடுக் குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையரின் ஒத்துழைப்பு அவசியம்

அமெரிக்க, ஹுஸ்டன் நகரில் நடந்த வரவேற்புபசாரத்தில் ஜனாதிபதி மஹிந்த

நாட்டை அபிவிருத்தி செய்வ தற்கு வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையரதும் ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கடந்த சனிக்கிழமை (25) ஹுஸ்டன் நகரத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஹுஸ்டன் நகரில் வசிக்கும் இலங்கையர்கள் வெஸ்டின் ஹோக் ஹோட்டலில் ஜனாதி பதிக்கும் அவரது பாரியாருக்கும் விசேட வரவேற்புபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

500க்கு மேற்பட்ட இலங் கையர்கள் கூடியிருந்த இந்த நிகழ்வில் ஹுஸ்டன் நகரின் காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்சன் மற்றும் ஹுஸ்டன் மேயர் அனிஸ் பார்க்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை தற்போது இன, மத, பேதமின்றி அனைவருக்கும் சமாதானமாக வாழக் கூடிய நாடாக உள்ளது. 2005 இல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். அதனை நான் செவ்வனே நிறைவேற்றியுள்ளேன். அது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ள ப்பட்ட யுத்தமல்ல.

இதேவேளை 2010 இல் மக்கள் மீண்டும் எமக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஆணை வழங்கி யுள்ளனர். அதனை நிறைவேற்றுவதற்கு வெளி நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு எதிர்காலத் திலும் அவசியப்படுகின்றது என்றார்.

இந் நிகழ்வில் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்ஸன் லீ உரையாற்று கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கை துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் இரு நாடுகளினதும் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் வகையில் ஜனாதிபதி யின் விஜயம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பலாலி உயர் பாதுகாப்பு வலய பாடசாலைகள் மீளக் கையளிப்பு இருபது வருடங்களாக வேறு இடங்களில் இயங்கியவை



பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தி லுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைகளுக்கென கையளிக்கப்பட வுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்படவுள்ள இந்த பாடசாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிடுகின்றனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் உட்பட அந்தப் பிரதேசத்திலுள்ள மேலும் சில பாடசாலைகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, வட மாகாண அபிவிருத்திக் கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இந்த பாடசாலையைக் கையளிக்கிறார்.

அதன் பின்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரிடம் இப்பாடசாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை சுமார் 64 வருடம் பழைமை வாய்ந்தது என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டதை அடுத்து 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வசாவிளான் பாடசாலை யாழ். உரும்பிராய் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தற்பொழுது அங்கு 1352 மாணவர்கள் கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்றைய நிகழ்வில் 1532 மாணவர்களும் பங்கு கொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பாடசாலை சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய கல்லூரியாக தரமு யர்த்தப்பட்டதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தெரிவி த்தார். இந்தப் பாடசாலை புனரமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டிலுள்ள ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் கல்வி அமைச்சின் வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டத்தினால் இந்தப் பாடசாலை புனரமைப்பு, நிர்மாணத்திட்டத்தி ற்கென 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ள இத் திட்டத்தின் மூலம் சேதமடைந்த கட்டடங்கள் புனரமைக்கப்படவு ள்ளதுடன், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆய்வு கூடங்கள், நூலகம், போன்றவை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தப் பணிகள் நிறைவுற்ற பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதன் மூலம் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...