Oct 7, 2010

பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி கண்டியில் சத்தியாக்கிரகம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இன்று பிற்பகள் 4 மணிக்கு கண்டி தலதா மாளிகை முன் பௌத்த பிக்குமார்கள் உற்பட சுமார் 1000க்கு மேற்பட்டோர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி சத்தியாக்கிரகத்தில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, கோட்டை நாக விகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் தம்பர அமில தேரர் உற்பட மகா சங்கத்தினரும் பெருமளவு பொது மக்களும் கலந்து கொண்டனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நடை பெற்ற இச்சத்தியாக்கிரகத்தின் போது இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாத்த இரானுவத்தளபதி சரத் போன்சேக்காவின் விடுதலைக்காக விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேறிய மக்களுக்கு உலர் உணவுப் பொருள் விநியோகம்

இன்று காலை மீளக்குடியமர்த்தப்பட்ட செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் குருக்கனாமடு மற்றும் லாவனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு எகெட் நிறுவனத்தின் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட உதவித் திட்டப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.சரிப், செங்கலடி உதவி பிரதேச செயலாளர் சித்திரவேல் மற்றும் அதிகாரிகள் இக்குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கினர்.

அரிசி, சீனி, பருப்பு, கோதுமை மா, பால்மா பக்கட் ஆகிய உலர் உணவுப் பொருட்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட 36 குடும்பங்களுக்கு இதன் போது வழங்கப்பட்டன.

தலா ஒரு குடும்பதிற்கு 3000ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக எகெட் நிறுவனத்தின் ஊடக இணைப்பாளர் மைக்கல் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கி மற்றுமொரு கப்பல்?

இலங்கை அகதிகளுடன் மற்றும் ஒரு கப்பல் கனடாவுக்கு செல்ல இருப்பதாக ரொறன்டோ சண் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே கப்பல் வருகை கண்காணிக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கப்பல் கனடாவில் பணிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வரலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சிறப்புற நிகழ்ந்த யாழ்.பல்கலைக்கழக 26வது பட்டமளிப்பு

பல்கலைக்கழக 26வது பட்டமளிப்பு விழா நேற்று 06.10.2010 புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசூரியா, மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர். பேராசிரியர்.என்.சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல் அமர்வு காலை 9மணிக்கு இடம்பெற்றது. அடுத்த அமர்வு பகல் 11மணிக்கும் அடுத்தடுத்த 3ம் 4ம் அமர்வுகள் பிற்பகல் 1.30 மற்றும் 3.00மணி ஆக நான்கு அமர்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஏராளமானோர் இளம், முது மற்றும் கலாநிதிப்பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான சம்பிரதாங்களின் அடிப்படையில் பல்கலைக்கழகம் வாழை,மாவிலை, தோரணங்களாலும், வாகை மாலைகளாலும் அலங்கரிக்கப்பெற்றிருந்தது.

வேந்தர் மற்றும் உபவேந்தர் உள்ளிட்ட விருந்தினர்களும் பட்டம் பெறும் மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்குக் காரணராயிருந்த சிவதருமவள்ளல் சேர்.பொன்.இராமநாதனின் திருவுருவத்திற்கு முன்னிருந்து பட்டமளிப்பு விழா நடைபெற்ற கைலாசபதி கலையரங்கிற்கு பாரம்பரிய மங்கல இசை முழங்க ஆலவட்டம், குடை முதலிய உபசாரங்களுடன் அழைத்து வரப்பெற்றனர்.

இவ்வாண்டில் இப்பல்கலைக்கழகத்தில் நிகழும் இரண்டாவது பட்டமளிப்பு விழா இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பட்டம் பெறுபவர்களின் உறவினர்கள் , நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் நல்லையாதீன மஹாசந்நிதானம் உள்ளிட்ட குருமார்களும் கலந்து கொண்டனர். கைலாசபதி கலையரங்கு இவ்வாண்டின் ஆரம்பத்தில் குளிரூட்டப்பெற்று வர்ணம் தீட்டி பாரம்பரியம் பேணிப் புனரமைக்கப்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதீ பரமேஸ்வரன் கோயில் இன்று முழுவதும் திறந்திருப்பதையும் விசேட வழிபாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

பாரம்பரிய முறைப்படி பட்டம்பெறும் மாணவர்களின் மகிழ்ச்சியோடு இணைந்து நிகழ்ந்த இந்நிகழ்வு இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான சிறப்பம்சம் என்பது பெருமையோடு சொல்ல வேண்டிய ஒன்றாகும்.
மேலும் இங்கே தொடர்க...

சரத்துக்குப் பதில் வேறொருவர் : தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை




சரத் பொன்சேகா அங்கம் வகித்த நாடாளுமன்ற ஆசனத்திற்குப் பதிலாக வேறொருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளரை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார் என சற்று முன்னர் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய இரண்டு ஐ.தே.க. எம்.பி.க்களை நீக்குவதற்கு இடைக்காலத் தடை


18 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐ.தே.க. வின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை கட்சியிலிருந்து நீக்குவதை தடுக்கக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான உபேஷா சுவர்ணமாலி, காலி மாவட்ட எம்.பி.யான மனுஷ நாணயக்கார ஆகியோரே இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து தம்மை விலக்குவது மக்கள் தெரிவையும் தமக்கு மக்கள் அளித்த ஆணையையும் மறுதலிப்பதாக அமையும் என்று அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் கட்டாயத்தின் பேரில் திகதியிடாத கடிதத்தில் கையொப்பமிட்டதாகவும், இதனால் இக்கடிதங்கள் சட்டவலுவற்றவை என்றும் இவர்கள் தமது வழக்கில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்ட நீதிவான் டபிள்யூ. ஆர்.எம். வதுகல வழக்கு விசாரணை முடியும் வரை மனுதாரர்களை ஐ.தே.க.வில் இருந்து நீக்குவதற்கு தடை விதித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகாவுக்கு சிறையினுள் போதிய பாதுகாப்பு




சிறைச்சாலைக்குள்ளும், நீதிமன் றம் சென்று வருவதற்கும் சரத் பொன்சேகாவுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள், புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க சபாநாயகரின் அனுமதியைப் பெற்று எழுப்பிய கவனயீர்ப்பு கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது விடயமாக அமைச்சர் மேலும் கூறுகையில் சிறைச்சாலை யிலிருந்து நீதிமன்றத்திற்கு சரத்பொன்சேகா சென்று வர போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

இது விடயமாக பிரதி பொலிஸ் மா அதிபருடன் கலந்து ரையாடி நடவடிக்கை எடுத்துள்ளேன். சிறையில் எல்லாக் கைதிகளும் ஒரே மாதிரியாகவே நடாத்தப்படுவர்.

ஐ.தே.க. ஆட்சி காலத்தில் நான் சிறை யில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது ஒழுங்கு முறையாக உணவு வழங்கப்பட வுமி ல்லை. உறவினர்கள் என்னைச் சந்திப்பதற்கும் கூட இடமளிக்கப்பட வில்லை. ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வட மாகாணத்தில் ரூ.190 கோடியில் சுகாதார திட்டம் ஐந்து மாவட்டங்களிலும் 1250 சுகாதார உதவியாளர்களை நியமிக்கவும் தீர்மானம்

வட மாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கென 19 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சேவையாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகாதார உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எய்ட்ஸ், காசம், மலேரியா ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் உலகளாவிய நிதியம் (மிபிதிஹிணி) என்ற திட்டத்தின் ஊடாக இதற்காக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதி ஐந்து முக்கிய திட்டங்களில் செலவு செய்யப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வி. ரவீந்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட பகுதியிலுள்ள 25 வைத்தியசாலை கள் புதிதாக நிர்மாணிக்கப்பட வுள்ளதுடன், ஆளணி பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“வரும் முன் காப்போம்” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளர்களுடன் இணைந்து சேவை யாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகா தார உதவியாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 570 பேருக்கு நவம்பர் மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்து அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த வேலைத் திட்டத்தின் முதலாவது அம்சத்தின் கீழ் 175 மருத்துவ மாதுகளும், 50 பொது சுகாதார அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் இவர்களுக்குத் தேவையான சகல பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

இரண்டாவது அம்சத்தின் கீழ் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 25 வைத்தியசாலைகள் புதிதாக நிர்மாணிக்க புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் எட்டு சுகாதார அதிகாரிகள் அலுவலகம், 12 விடுதிகள், ஐந்து மலேரியா தடுப்பு அலுவலகம், இரண்டு இருதய சிகிச்சை பிரிவு, ஆகியன நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் 8 கெப் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன.

மூன்றாவது அம்சத்தின் கீழ் 56 மருத்துவ பரிசோதனை நிலையங்களை அமைப்பதற்கு அல்லது விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. சுமார் 85 மருத்துவ ஆய்வுக் கூட உதவியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன என்றார்.

நான்காவது அம்சத்தின் கீழ் உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

வட மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன் நிதி ஒதுக்கீடுளையும் செய்துள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

சென்னையில் பாரிய கொள்ளைகள்: கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு இலங்கைவாசி குணராஜா தேடப்படுகிறார்


சென்னை புறநகர் பகுதிகளில் 54 வழக்குகளில் திருட்டுப் போன 237 பவுண் தங்க நகைகள், 8 டாட்டா சுமோ கார்கள் மற்றும் ரூ. 39.5 இலட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்ட ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்புள்ள பொருட்களை பொலிசார் மீட்டனர். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ஜயசிங்கம் உள்ளிட்ட 16 பேரை புறநகர் பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக சென்னை புறநகர் பொலிஸ் உயரதிகாரி ஆர். ஜாங்கிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அண்மையில் சேலையூர், மடிப்பாக்கம், தாம்பரம், பட்டாபிராம், மதுரவாயல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு சென்னை, புறநகர் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, வாகன திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்றன.

இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த பொலிஸ் தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு 54 வழக்குகளில் திருட்டுபோன ரூ. 1 கோடியே 5 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர். அவற்றுள் 237 பவுண் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், 8 கார்கள், ரூ 39 இலட்சத்து 51 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவையும் அடங்கும்.

இந்த 54 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜயசிங்கம் என்ற இலங்கை ஆசாமியும் அடங்குவார். அவருடைய கூட்டாளி இலங்கையைச் சேர்ந்த குணராஜா என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் கந்தசாமி, சீனிவாசன், மாரிமுத்து ஆகிய 3 பேரிடம் இருந்தும் ரூ. 10 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. அண்மையில் அம்பத்தூரில் ரூ. 70 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதில் பொலிஸார் விரைந்து செயல்பட்டு இரண்டே நாட்களில் ரூ. 40 இலட்சத்தை மீட்டனர். எஞ்சிய தொகையையும் விரைவில் பொலிஸார் மீட்டு விடுவார்கள் என பொலிஸ் உயரதிகாரி ஜாங்கிட் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபுதேவா-நயன்தாரா 19-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு






சென்னை, அக்.6: சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் பிரபுதேவா, நடிகை நயன்தாரா ஆகியோர் அக்டோபர் 19-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபுதேவாவின் மனைவி ரம்லத் (எ) லதா தாக்கல் செய்த புதிய மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ரம்லத் சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜராகி அவர் தாக்கல் செய்த புதிய மனு விவரம்:

எனது கணவர் பிரபுதேவாவை என்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தேன். இந்த நிலையில், எனது கணவரும், நயன்தாராவும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரியவருகிறது.

அவருடனான திருமண பந்தம் இப்போதும் நீடிக்கிறது. இந்த நிலையில், பிரபுதேவா 2-வது திருமணம் செய்துகொண்டால் நானும், எங்களது குழந்தைகளும் பாதிக்கப்படுவோம். எனவே, பிரபுதேவா, நயன்தாரா ஆகியோர் டிசம்பரிலோ அல்லது இந்த வழக்கு முடியும் வரையிலோ திருமணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல், அவர்கள் இருவரும் இணைந்து பத்திரிகைகளுக்கு பேட்டியோ, புகைப்படமோ அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரினார்.

இந்த மனு சென்னையிலுள்ள குடும்ப நல முதன்மை நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, பிரபுதேவா, நயன்தாரா ஆகியோர் நீதிமன்றத்தில் அக்டோபர் 19-ம் தேதி நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டார். அன்றைய தினத்தில் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...